கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு; குரல் கொடுத்த ஷிகர் தவான் - அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

"கபடி வீரர்களுக்கு மாநில அளவிலான போட்டியில் கழிவறையில் வைத்து உணவு வழங்கப்படுவது மனமுடையச் செய்கிறது. உத்தர பிரதேச அரசு மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஷிகர் தவான்
கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு; குரல் கொடுத்த ஷிகர் தவான்
கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு; குரல் கொடுத்த ஷிகர் தவான்Twitter
Published on

உத்தர பிரதேசம் மாநிலம், சஹாரன்பூரில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவிகளுக்கு வழங்குவதற்கான உணவு கழிவறையில் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுநீர் கழிக்கும் கழிவறையில் இருந்து உணவுகளை எடுத்து வரும் வீடியோ வைரலாக பரவியது. இந்த வீடியோவை கபடி வீரர்களே எடுத்து கடந்த 16ம் தேதி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பலரும் கபடி வீரர்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர். அரசியல் கட்சிகள் தொடங்கி விளையாட்டு வீரர்கள் வரை கபடிக்காக பேசத் தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சி டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், "பல நிகழ்ச்சிகளுக்கு பாஜக அரசு கோடிக் கணக்கில் செலவிடுகிறது. ஆனால் கபடி வீராங்கனைகளுக்கு முறையான ஏற்பாட்டை செய்ய பணம் இல்லை’’ என குற்றம்சாட்டியிருந்தது.

டிஆர்எஸ் கட்சி டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘உத்தர பிரதேசத்தில் கழிவறையில் வைக்கப்பட்ட உணவு கபடி வீராங்கனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீராங்கனைகளை பா.ஜ.க மதிக்கும் விதம் இதுதானா? வெட்கக்கேடு!’’ என தெரிவித்துள்ளது.

கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு; குரல் கொடுத்த ஷிகர் தவான்
"Dhoni, Kohli மட்டும் ஹீரோ இல்ல" முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் காட்டம்

இது குறித்து தனது டிவிட்டரில் பதிவிட்ட ஷிகர் தவான், "கபடி வீரர்களுக்கு மாநில அளவிலான போட்டியில் கழிவறையில் வைத்து உணவு வழங்கப்படுவது மனமுடையச் செய்கிறது. உத்தர பிரதேச அரசு மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு; குரல் கொடுத்த ஷிகர் தவான்
Virat Kohli : 1021 நாட்களுக்கு பிறகு சதம் விளாசிய விராட் - கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

தற்போது, சஹாரன்பூர் விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அகிலேஷ் சிங் விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘தவறு செய்த ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த ஒப்பந்ததாரர் பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்’’ என்றார்.

கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு; குரல் கொடுத்த ஷிகர் தவான்
FIFA : இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை விதித்த ஃபிஃபா - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com