குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 : மேஷம் முதல் ரிஷபம் வரை

சுப கிருது வருடம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி, 14/ 04/ 2022 வியாழக்கிழமை சித்திரை 01 அன்று, அதிகாலை 04.16மணிக்குப் பூரட்டாதி நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் மீன ராசிக்குக் குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். குரு பார்க்கக் கோடி நன்மைதான்.
குரு பகவான்
குரு பகவான்Twitter
Published on

வாழ்வின் வழிகாட்டியாக தொழில் குரு, ஞானகுரு போன்ற குருமார்கள் எவ்வளவு அவசியமோ, அந்த அளவு ஜோதிடத்தில் ஒவ்வொரு வருடமும் பெயர்ச்சியாகும் குருபகவானின் இடமும் , பார்க்கும் இடமும் பல கோடி நன்மைகளை வழங்க வல்லது. அதன்படி

சுப கிருது வருடம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி, 14/ 04/ 2022 வியாழக்கிழமை சித்திரை 01 அன்று, அதிகாலை 04.16மணிக்குப் பூரட்டாதி நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் மீன ராசிக்குக் குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். குரு பார்க்கக் கோடி நன்மைதான். இந்த குருப் பெயர்ச்சி மீன ராசியில் தன்னுடைய சொந்த வீட்டிற்கு வருவதால் குரு இருக்கும் இடத்திற்கும் பார்க்கும் இடத்திற்குப் பல கோடி நன்மைகள் கிடைக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் பல அற்புத நற்பலன்கள் கிடைக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாகும். 5ம் இடமாகக் கடகத்தின் மீதும்,7 வது இடமாகக் கன்னி ராசியின் மீதும் குருவின் பார்வை இருப்பதால் இந்த இரு ராசிக்காரகளுக்கும் அமோக பலன்கள் கிடைக்கும்.

துலா ராசிக்கு ரோக ஸ்தான குரு தனுசு ராசிக்கு அஷ்டம அர்த்தாஷ்டம குரு மேஷத்திற்கு விரய குரு மீனத்திற்கு ஜென்ம குரு இந்த குரு பெயர்ச்சி அடைவதால், மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் சுய ஜாதகத்தின் அடிப்படையில் அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து பலன் பெறலாம்

அடுத்ததாக குருப் பெயர்ச்சி காலத்தில் 16/ 3 /2023 மூன்று கும்ப ராசிக்குச் சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் அப்பொழுது மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது. விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், கடக ராசிக்கு அஷ்டமத்து சனியாகவும், சிம்ம ராசிக்கு கண்டகச்சனியும் வருகிறது. அதனால் அடுத்த நகர்வை நினைவில் கொண்டும், தற்போதைய நிலையை கவனம் கொண்டும் சிறப்பாகச் செயல்பட்டால் மகிழ்வான வாழ்வு அமையும்.

மேஷம்
மேஷம்Twitter

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை1)

மேஷ ராசி நேயர்களே. பதினோராவது இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 12-ம் இடமான விரய ஸ்தானத்திற்கு வருகிறார். வரவைக் காட்டிலும் செலவு கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகி விடுகிறது என்கிற கவலை வேண்டாம் அதை அப்படியே சேமிப்பாக எடுத்து வைத்து விட, அதை சுபவிரயச் செலவுகளாகச் செய்துவிட இந்த வீண் விரயங்களில் இருந்து தப்பிக்கலாம். மழையில் நனைய வேண்டும் என்பது விதி இருந்தால் அது லேசான மழையாகவும் கூட இருக்கலாம். அதனால் வீண் விரயம் ஏற்படுகிறது என்ற கவலை வேண்டாம். அதைச் சரியான வழியில் ஒரு முதலீடாகவோ, சேமிப்பாகவோ, வீட்டிற்குத் தேவையான பொருளை வாங்குவதாகவோ, சுப விரயமாக பயன்படுத்திக்கொள்ளப் பயம் ஏதும் இல்லை.

குரு இருக்கும் இடம் விரய ஸ்தானம் தான் ஆனால் உங்களுக்குப் பார்க்கும் இடத்தின் பலன் என்னவோ நன்றாகவே உள்ளது. வீட்டை பழுது பார்க்க, வீடு வாங்குவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியைத் தரும். உறவினர்கள் சொந்தங்களுக்காகச் செலவுகள் உடன்பிறப்புக்கான திருமண செலவுகள், குழந்தைபிறப்பு செலவுகள் என ஏற்படும். இருந்தாலும் சின்னசின்ன உதிரி வருமானம் உண்டு. உங்கள் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே செலவாகிறது என்று கவலைப்படாமல் உதிரி வருமானத்திற்கு என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். நீண்ட நாட்களாக வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இது நடைபெறும் நேரம். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். எடுத்த முயற்சி வெற்றியாகும்.

குரு
குருTwitter

குரு 4 6 8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார் இதனால் நிறைய நல்ல பலன்களை மேஷ ராசிக்காரர்கள் பெறப் போகிறார்கள். அரசு வேலைக்கான முயற்சிகள் மேற் கொண்டவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தனியார்த் துறையில் வேலைகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைப்பதற்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன. வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பீர்கள். வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் நீண்ட நாட்களாகக் கனவுகளோடு இருந்தவர்களுக்கு நனவாகும்.

குரு 8-வது இடத்தைப் பார்ப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்கள் தீரும் இதுவரைக்கும் இவ்வளவு தூரம் மருத்துவம் எடுத்தும் தீரவில்லையே என்ற ஏக்கம் இப்பொழுது தீர்ந்துவிடும். உழைப்புகள், அலைச்சலுக்கு ஏற்றவாறு, உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கக் கூடிய நேரமாக இது அமைகிறது. 8-ஆம் இடத்து குரு உங்களுக்கு எட்டும் தூரத்தில் வாய்ப்புகளை வைத்திருக்கிறார். சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும். பொது வாழ்வில் ஏற்படும் மற்றவர்கள் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படும் விதத்தில் உங்களுடைய முன்னேற்றம் இந்த வருடம் குருப்பெயர்ச்சி அமைகிறது. பங்குச் சந்தை லாபம் ரியல் எஸ்டேட் மருத்துவம் சம்பந்தமான தொழில்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு நல்ல செய்தி கிடைக்கும். விலகிச் சென்ற நிறுவனத்திலிருந்து மீண்டும் உங்களைக் கூப்பிட்டு அதிக சம்பளத்திற்கு வேலை கொடுப்பதற்கான வாய்ப்பு அமையும் காலகட்டம் இது. மகான்கள், சித்தர்கள் வழிபாடு நற்பலன்களைத் தரும். தேடிச்சென்று சிலருக்காவது அன்னதானம் செய்வது கூடுதல் நற்பலன்களைத் தரும்.

அலர்ட் டைம் = குரு வக்கிர காலம்

2022 ஜூலை முதல் பிப்ரவரி முன்பாதி வரை வக்கிர காலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் அவசியம். ஒரு முறைக்கு இரு முறை யோசித்து, சரியான ஆலோசனை பெற்றுச் செயல்பட நன்மையை தரும்.

நிதானம் பொறுமை தேவை. . மேல் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பெரும்பாலும் மெளனம் கடைப்பிடித்தாலே பாதி பிரச்சனைகள் குறையும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது இது பின்னொரு காலத்தில், உங்களைப்பற்றி என்று சொன்னார் தெரியுமா என்று திருப்பி அவர்கள் செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இப்படியான காலகட்டத்தில் மிகவும் அமைதியும் பொறுமையும் அவசியம்.

ரிஷபம்
ரிஷபம்Twitter

ரிஷபம் கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2

ரிஷப ராசி நேயர்களுக்கு, 11-ஆம் இடத்து குரு பகவான் பல நன்மைகளைத் தரப்போகிறார். லாப ஸ்தானத்தைப் பல மடங்கு உயர்த்தும் அற்புதமான காலகட்டமாக இந்த குருப் பெயர்ச்சி காலம் அமைகிறது. இப்போதிலிருந்தே பணத்தைச் சேகரிப்பதற்கும் எப்படி முதலீடு செய்வது என்பதற்கு முறையாகத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

குரு பகவான்
குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 : துலாம் முதல் தனுசு வரை

இத்தனை நாட்கள் அவை சின்ன சின்ன உடல் உபாதைகளைப் பெரிய மன உளைச்சலுக்கு ஏற்படுத்தியிருக்கும் எல்லாம் சரியாகி, உங்களுக்கு ஆரோக்கியம் என்ற செல்வம் அபரிமிதமாகக் கிடைக்கப் போகின்ற நேரம். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். அதுவே மிகப்பெரிய பலமாகப் பலருக்கு இருக்கும். சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள் செல்வ, செல்வாக்கான வாழ்க்கை வாழ போகிறார்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல் வாங்குவதிலும் ஆபரணங்கள் வாங்குவதிலும் அவரவர் கர்ம வினைப்படி ஜாதகத்தைப் பொறுத்து அமையும். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு 3 5 7 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் முயற்சியில் இருக்கும் முட்டுக்கட்டைகள் அகலும். 90 சதவீதம் முடிந்த காரியம் கடைசி 10 சதவீதத்தில் முற்றிலும் முடியாமல் போயிருக்கலாம். இனி அந்த நிலைமை இப்போது உங்களுக்கு நிச்சயம் மாறும். பூர்வீக சொத்துக்கள் நல்லபடியாக வந்து சேரும். தொட்டதெல்லாம் துலங்கும் காலமாகப் பொற்காலமாக இருக்கும் . அடுக்கடுக்காய் பணம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு நமக்குத்தான் இப்படிப் பல நன்மைகளை நடக்கிறதா என்று நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுக்குச் சந்தோஷங்களும் செல்வங்களும் வந்து சேரும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். அடுத்த வருடத்திற்குள் கிரக பிரவேசம் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். தாமதிக்காமல் வாய்ப்புகளை முயற்சிகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வியாபாரங்கள் சூடுபிடிக்கும் இயற்கையைத் தோட்டங்கள் அமைப்பது கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடிய காலகட்டம் இது. உயர் பதவிகள் கிடைக்கும் பொறுப்புகளும் கிடைக்கும் அதற்கான வருமானமும் உங்களுக்கு வந்து சேரும். சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும். பிபி கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் உடல் நலத்திலும் கவனம் அவசியமாகும்.

குரு பகவான்
மீண்டும் கொரோனா : இதுதான் சீனாவின் இப்போதைய நிலை - கள தகவல்கள்

அலர்ட் டைம் = வக்கிர காலம்

உங்களின் உயர்வுகளைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்பட்டால் மட்டும் போதுமா, மற்றவர்களும் ஆச்சரியப்படுவார்கள் அல்லவா? அதுமட்டுமல்லாமல் சிலர் பொறாமைப்படுவார்கள். அந்த பொறாமை எழுப்பிவிடும் நேரம் குருவின் வக்கிர காலமாகும் இந்த வருடம் ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், இவர் மட்டும் நல்வாக்கு சம்பாதிக்கிறார் எப்படி என்பதற்கான ஆர்வமும் போட்டியும் பொறாமையும் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் இடையே ஏற்படும். வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்தே விற்பனை செய்து சம்பாதிக்கிறாரே என்ற பொறாமை எழும். உங்களிடம் விளக்கம் கேட்பவர்களை நன்கு கவனியுங்கள். பயணங்களில் தடை ஏற்படும். பொறாமை கொண்டவர்களை அருகில் வைத்துக் கொள்வது நல்லதல்ல மேலும் யாரெல்லாம் அதுபோன்ற எண்ணம் உடையவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு காலகட்டமாக குருவின் வக்ர காலம் இருக்கிறது. அதனால் திடீரென்று தடைகள் ஏற்படுகிறது தடங்கல்கள் வருகிறதே என்று ஏமாற்றமடைய வேண்டாம் அதிர்ச்சியடைய வேண்டாம். இது வெறும் இரண்டு மாதம் மட்டுமே. நவம்பர் மாதத்தின் இறுதியிலிருந்து மீண்டும் பொற்காலம் சிறகடித்துப் பறக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவி செய்வார்கள். வீண் வாக்குவாதங்களில் ஏற்பட ஏற்படுதல் வேண்டாம். குரு வழிபாடு செய்தல் நன்று.

குரு பகவான்
சேலம் : உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் சிலைக்கு குடமுழுக்கு!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com