IPL 2022: சிங்க நடை போட்ட விராட்கோலி; நம்பர் 1 அணியை அசால்ட்டாக சாய்த்தது RCB

நேற்றைய போட்டியில் வென்றாலும் கூட ஆர்சிபி இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பை பெறவில்லை. டெல்லி அணி தனது கடைசி போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டெல்லி வென்றால் டெல்லியே பிளே ஆஃப் செல்லும்.
Virat Kohli
Virat KohliBCCI
Published on

வாழ்வா சாவா ஆட்டத்தில் நேற்றைய தினம் பெங்களூரு ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது.

வழக்கமாக முக்கியமான போட்டிகளில் சொதப்பாத் தள்ளும் ஆர்சிபி நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாக ஆடி வென்றது.

பெங்களூரு அணியின் வெற்றியால் ஹைதரபாத் மற்றும் பஞ்சாப் அணிகளின் பிளே ஆஃப் கனவு தகர்ந்தது. மொத்தமுள்ள 10 அணிகளில் ஐந்து அணிகள் தற்போது பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுள்ளன.

மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதரபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் வெளியேறியுள்ளன.

நேற்றைய போட்டியில் வென்றாலும் கூட ஆர்சிபி இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பை பெறவில்லை. டெல்லி அணி தனது கடைசி போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டெல்லி வென்றால் டெல்லியே பிளே ஆஃப் செல்லும். ஏனெனில் டெல்லி மற்றும் பெங்களூரு அப்போது 16 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் டெல்லியே முன்னிலையில் இருக்கிறது.

ஒருவேளை டெல்லி தோல்வியடையும் பட்சத்தில் பெங்களூரு அணி நேரடியாக பிளே ஆஃப் வாய்ப்பை பெறும்.

நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முதல் ஓவரிலேயே இரண்டு பௌண்டரி ஒரு சிக்ஸர் என அமர்க்களமாக ஆரம்பித்தார் விருத்திமன் சாஹா.

ஹேசில்வுட் ஷுப்மன் கில் விக்கெட்டை தூக்க, பவர்பிளேவின் கடைசி ஓவரை வீசிய மேக்ஸ்வெல் மேத்யூ வேட் விக்கெட்டை கைப்பற்றி விக்கெட் மெய்டனாக வீசினார். இதனால் பவர்பிளே முடிவில் ஸ்கோர் 38/2. அதன் பின் சாஹாவும் சிறிது நேரத்தில் நடையை கட்ட ஹர்டிக் பாண்ட்யா பொறுப்பாக கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார்.

கடைசி இரு ஓவர்களில் 34 ரன்கள் எடுத்து குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் எடுத்தது. ஹர்டிக் 47 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். ரஷீத் கான் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி ஆறு பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.

Virat Kohli
IPL 2022 : சாகும் வரை சண்டை செய்த கொல்கத்தா; டீ காக் செய்த தரமான சம்பவம் - 'மாஸ்' மேட்ச்


169 எடுத்தால் தான் ரேஸில் நீடிக்க முடியும் எனும் இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு. டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர்.

உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக இவ்விருவரும் விளையாடினர். குறிப்பாகப் பல நாட்களுக்குப் பிறகு விராட் கோலி லாவகமாகப் பந்துகளை விளாசினார்.

ரஷீத் கான் பந்தில் சிக்ஸர் வைத்து 33 பந்துகளில் அரை சதம் கடந்தார் கோலி. 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு.

சாய் கிஷோர் ஓவரை மட்டும் கவனமாக விளையாடிவிட்டு மற்றவர்களைப் பிரித்து மேய்ந்தது இந்த ஜோடி. 15வது ஓவரில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டு பிளசிஸ் விக்கெட்டை இழந்தது ஆர்சிபி.

Virat Kohli
IPL 2022: 'மாரியாத்தா உனக்கு இரக்கமே இல்லையா' விராட் கோலிக்கு தொடரும் துரதிருஷ்டம்
Virat Kohli
Virat KohliBCCI

அதன் பின்னர் களம் புகுந்த மேக்ஸ்வெல் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களில் பந்துகளை டீல் செய்தார். கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் ரஷீத் கானிடம் வீழ்ந்தார். ஆனால் மேக்ஸ்வெல் எந்த பதற்றமும் இன்றி 19வது ஓவரிலேயே மூன்று பௌண்டரிகளை விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

நேற்றைய தினம் 18 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் 5 பௌண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் விளாசி 40 ரன்கள் எடுத்தார்.

எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு இப்போது மும்பையின் வெற்றிக்காகக் குத்தவைத்துக் காத்திருக்கிறது.

Virat Kohli
விராட் கோலி :"90 நிமிடங்கள் நிற்காமல் ஆடினேன்" - அதிரடி ஆட்டத்தின் ரகசியம் பகிர்ந்த நாயகன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com