ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி மர்மாமான முறையில் கொலை- என்ன நடந்தது?

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 17 வயது பெண் ஒருவர் செப்டம்பர் 20ம் தேதி காணாமல் போனார். 10 நாட்களுக்கு பின்னர் அவரது இறந்த உடல் பல காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி மர்மாமான முறையில் கொலை- என்ன நடந்தது?
ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி மர்மாமான முறையில் கொலை- என்ன நடந்தது?Twitter
Published on

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் தீவீரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

22 வயதான மஹ்சின் அமினி என்ற பெண் மாரல் போலீஸ் எனப்படும் ஒழுக்க காவலர்களால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பலத்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 17 வயது பெண் ஒருவர் செப்டம்பர் 20ம் தேதி காணாமல் போனார். 10 நாட்களுக்கு பின்னர் அவரது இறந்த உடல் பல காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நிகா ஷகராமி என்ற அந்த சிறுமியின் மூக்கு மற்றும் மண்டை ஓடு நொருங்கிய நிலையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி மர்மாமான முறையில் கொலை- என்ன நடந்தது?
ஈரான்: இஸ்லாமிய புரட்சிக்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை என்ன?- பேசும் படங்கள்

கடந்த 1979ம் ஆண்டு ஈரான் இஸ்லாமிய குடியரசாக உருவானது. அப்போது முதல் பெண்களின் ஒழுக்கம் சார்ந்த விதிமுறைகள் அங்கு அதிகரிக்கப்பட்டன. 1981ம் ஆண்டு ஹிஜாப் அணிவது போன்ற விதிமுறைகள் சட்டமாக்கப்பட்டன.

அப்போது முதலே பெண்களும் இதற்கு எதிராக போராடி வருகின்றனர். ஹிஜாபுக்கு எதிரான போராட்டங்களால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம். பலர் சிறை வைக்கப்பட்டனர், துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஹிஜாபை சரியாக அணியாததற்காக மாஹ்ஷா அமினி ஒழுக்க காவலர்களால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து செப்டம்பர் 16, 2022 முதல் பெண்கள் ஒன்றாக திரண்டு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி நிகா ஷகராமி தற்போது மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஹிஜாபுக்கு எதிராக ஈரான் தெருக்களில் தீவிரமாக போராடி வந்தார். தனது முடியை வெட்டிக்கொண்டும் தனது ஹிஜாபை எரித்தும் எதிர்ப்பை வெளிப்படித்தியிருக்கிறார்.

ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி மர்மாமான முறையில் கொலை- என்ன நடந்தது?
ஈரான்: இளம்பெண் கொலை? ஹிஜாபிற்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் - விரிவான தகவல்கள்

தி டெலிகிராப் செய்தி தளம் கூறுவதன் படி, பாதுகாப்பு படையினரிடமிருந்து தப்பிச் செல்வதாக நிகா தனது நண்பரிடம் கூறியுள்ளார். அது தான் அவர் கடைசியாக பேசியதும்.

செப்டம்பர் 20 தேதி அவர் காணமல் போயிருக்கிறார்.

10 நாட்கள் கழித்து செப்டம்பர் 30ம் தேதி அவரது உடல் கரிஜக் சிறியிலிருந்து குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 3ம் தேதி பாதுகாப்பு படையினர் மீண்டும் உடலைக் கைப்பற்றி எரித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் நிகாவின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரானில் தற்போது நடந்துவரும் போராட்டத்தில் குறைந்தது 83 பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மனித உரிமை அமைப்புகள் கடந்த வாரம் கூறியிருந்தன. பலர் காணாமல் போவதும் தொடர்கிறது.

சர்வதேச அளவில் ஈரான் பெண்களுக்கு ஆதரவு பெருகிவருகிறது. ஈரான் பெண்களுக்கு ஆதரவு வழங்கும் வண்ணம் சுவீடன் நாடாளுமன்ற உறுப்பினர் தனது முடியை வெட்டிக்கொண்டார். பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகைகள் ஈரானிய பெண்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

ஈரான் அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமா என்பது கேள்விக் குறியாக தொடர்கிறது.

ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி மர்மாமான முறையில் கொலை- என்ன நடந்தது?
ஹிஜாப் அணிய மறுத்த பத்திரிக்கையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com