ஈரான்: "ஜாம்பி ஏஞ்சலினா" சிறைதண்டனைக்கு பின் உண்மை முகத்தை வெளிக்காட்டிய பெண்- யார் இவர்?

கடந்த 2019ம் ஆண்டு விளையாட்டாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்துக்காக 19 வயது பெண்ணான ஷஹர் தபார் கைது செய்யப்பட்டார்.
ஷாகிர் தாபர் எடிட் செய்த புகைப்படம் - நடிகை ஏஞ்சலினா ஜுலி
ஷாகிர் தாபர் எடிட் செய்த புகைப்படம் - நடிகை ஏஞ்சலினா ஜுலிTwitter

இரான் நாட்டைச் சேர்ந்த 21 வயது பெண் ஷஹர் தபார் சிறைச்சாலையில் இருந்து வெளியாகி பல நாட்கள் கழித்து தனது உண்மையான முகத்தைக் காட்டியிருக்கிறார்.

கடந்த 2019ம் ஆண்டு விளையாட்டாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்துக்காக ஷஹர் தபார் கைது செய்யப்பட்டார்.

தெய்வ நிந்தனை, ஹிஜாபை மதிக்காதது போன்ற குற்றங்களுக்காக அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனைக் கொடுக்கப்பட்டது.

தனது உண்மையான முகத்தைக் காட்டுவதற்கு முன்பு வரை ஷஹர் தபார் பல பிளாஸ்டின் செய்து கொண்டதாக நம்பப்பட்டார்.

சிறையிலிருந்து 14 மாதங்கள் கழித்து வெளியான ஷஹர் ஒரு நேர்காணலில் தனது உண்மையான முகத்தைக் காட்டியுள்ளார்.

ஹாலிவுட் நடிகை ஆஞ்சலின ஜூலி போல தெரிய வேண்டும் என்பதற்காக பல பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக இன்ஸ்டாவில் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தார் ஷஹர்.

 ஷஹர் தபார்
ஷஹர் தபார்

அது ஏஞ்சலினா ஜூலியின் அச்சுறுத்தும் வடிவமாக இருந்தது. இணையத்தில் இவரை ஜாம்பி ஏஞ்சலினா ஜூலி என்றே அழைத்தனர். இவருக்கு லட்சகணக்கில் பின்தொடர்பவர்களும் உருவாகினர்.

இந்த புகைப்படங்கள் காரணமாகவே அவர் சிறைக்கும் அனுப்பப்பட்டார். ஆனால் இவை அவரது உண்மையான புகைப்படங்கள் அல்ல. போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்டவை.

ஷாகிர் தாபர் எடிட் செய்த புகைப்படம் - நடிகை ஏஞ்சலினா ஜுலி
ஈரான்: இஸ்லாமிய புரட்சிக்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை என்ன?- பேசும் படங்கள்

"19 வயதேயான ஷஹர் தபார் நகைச்சுவையாக செய்த செயலுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தாய் தினமும் தன் அப்பாவிக் குழந்தை சிறைச்சாலையில் துன்பப்படுவதை எண்ணி வருந்துகிறார். நடிகை ஏஞ்சலினா ஜூலி இதற்காக குரல் கொடுக்க வேண்டும்" என ஆர்வலர் மசிஹ் அலினெஜாட் உள்ளிட்டப் பலர் குரல் கொடுத்தனர்.

இதன் பின்னரே இவருக்கு தண்டனை குறைக்கப்பட்டு விடுதலைப் பெற்றார்.

பாத்திமா கிஷ்வந்த்
பாத்திமா கிஷ்வந்த்
ஷாகிர் தாபர் எடிட் செய்த புகைப்படம் - நடிகை ஏஞ்சலினா ஜுலி
ஈரான்: போராட்டத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுமி மர்மாமான முறையில் கொலை- என்ன நடந்தது?

ஷஹரின் உண்மையான பெயர் பாத்திமா கிஷ்வந்த். இவர் உலக அளவில் பிரபலமாக நினைத்து இதனைச் செய்திருக்கிறார். நடிகையாக ஆவதனை விட இது மிக எளிதானது என நினைத்தகாக கூறுகிறார்.

"ஆரம்பத்தில் என் அம்மா இவற்றை நிறுத்தச் சொன்னார் நான் கேட்கவில்லை" என அந்த நேர்காணலில் கூறியுள்ளார் ஷஹர். அத்துடன், "என் உண்மையான முகம் ஓரளவு ஏஞ்சலினா ஜூலியை ஒத்திருக்கிறது. ஆனால் இன்னொருவரைப் போல இருக்க நினைப்பது என் லட்சியம் இல்லை என்பதை இப்போது உணர்ந்திருக்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

ஷாகிர் தாபர் எடிட் செய்த புகைப்படம் - நடிகை ஏஞ்சலினா ஜுலி
ஈரான்: இளம்பெண் கொலை? ஹிஜாபிற்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com