Adani Twitter
பிசினஸ்

NDTV -யைக் கைப்பற்ற அம்பானியின் நிறுவனத்தை பயன்படுத்திய அதானி - என்ன நடந்தது? - Explained

NewsSense Editorial Team

நேற்று என் டி டிவி குழுமத்தின் 29.18 சதவீத பங்குகளை ஒரு துணை நிறுவனத்தின் மூலம் கைப்பற்றியதாக அதானி குழுமம் கூறியது. மேலும் என்டிடிவி நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கு ஓர் ஆஃபர் ஃபார் சேல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதானி குழுமம் கூறியிருக்கிறது. பொதுவாகவே கௌதம் அதானி இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதியுடன் மிகவும் நெருக்கமான நட்பில் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஒருவேளை அப்படி மேலும் 26 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கினால் இந்தியாவில் இப்போதும் நரேந்திர மோதி அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களையும், அவரது அரசில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வரும் என் டி டி வி நிறுவனம் என்ன ஆகும் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அதானி குழுமம் என் டி டி வி குழுமத்தின் 29.18 சதவீத பங்குகளை வாங்கியது தங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாக அந்த நிறுவனத்தின் நிறுவனர்களான ராதிகா ராய் மற்றும் ப்ரனாய் ராய் செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

என்டிடிவி நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகளை வாங்குவதற்கு கிட்டத்தட்ட தசாப்த காலத்திற்கு முன்பே என் டி டி வி நிறுவனத்தை கைப்பற்றுவதற்கான பணிகள் அன்றைய தேதிக்கு இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டது என்கிறது ஸ்க்ரோல் வலைதளம்.

ஏ எம் ஜி மீடியா நெட்வொர்க் லிமிடெட் என்கிற அதானி குழுமத்தின் முழுமையான துணை நிறுவனம், விஷ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை 113.74 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இந்த நிறுவனத்தின் மூலம் தான் அதானி குழுமம் என் டி டிவி பங்குகளை கைப்பற்றியது.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விஷ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தன்னை ஒரு வணிக மேலாண்மை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் நிறுவனமாக கூறிக் கொள்கிறது. ஆனால் இதுவரை அந்நிறுவனத்துக்கு என எந்த ஒரு சொத்து பத்துக்களும் இல்லை. அதேபோல விஸ்வ பிரதான் நிறுவனத்தின் இயக்குனர்கள் அந்த காலகட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இதே விஷ்வ பிரதான் நிறுவனம் ராதிகா ராய் ப்ரனாய் ராய் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு 403.85 கோடி ரூபாயைக் கடனாக கொடுத்தது. அந்த ராதிகா ராய் ப்ரனாய் ராய் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் என் டி டி வி -யில் சுமார் 29 சதவீத பங்குகளை வைத்திருந்தது.

இப்போது தானே விஷ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எந்த சொத்து பத்துக்களும் இல்லை என்று பார்த்தோம். அதற்குள் எப்படி சுமார் 403 கோடி ரூபாயை வேறு ஒரு நிறுவனத்திற்கு கடன் கொடுக்க முடிந்தது என கேள்வி எழுகிறதா...?

விஷ்வ பிரதான் நிறுவனத்திற்கு ஷினானோ ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் கடன் கொடுத்தது. ஷினானோ நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்கிற நிறுவனம் கடன் கொடுத்திருக்கிறது. சொல்லப்போனால் ஷினானோ நிறுவனம் அப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாக இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012 ஆம் ஆண்டு விஸ்வ பிரதான் நிறுவனத்தின் உரிமை கைமாறியதாக அந்நிறுவனம் இந்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் மற்றும் தரவுகள் கூறுகின்றன.

Mukesh Ambani

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மகேந்திர நாதாவோடு தொடர்புடைய நெக்ஸ்ட் வேவ் டெலிவெஞ்சர் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ப்ளூ பில்ட்டுவேல் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் விஸ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய உரிமையாளர்களாயினர்.

நேற்று (ஆகஸ்ட் 23 செவ்வாய்க்கிழமை), அதானி குழுமம் விஷ்வ பிரதான் நிறுவனத்தை வாங்கும் வரை, விஸ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நெக்ஸ்ட் வேவ் டெலிவெஞ்சர்ஸ் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாகவே இருந்ததாக இந்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கை மற்றும் தரவுகள் கூறுகின்றன.

ராதிகா ராய் பிரனாய் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்திற்கு விஷ்வ பிரதான் கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கொடுத்த 403 கோடி ரூபாய் கடன் இப்போது வரை திரும்ப கொடுக்கப்படவில்லை என பல்வேறு பதிவுகள் கூறுகின்றன.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ராதிகா ராய் ப்ரனாய் ராய் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு கடன் கொடுக்கும் ஒப்பந்தத்திலேயே, கடன் காலத்தில் விஸ்வ பிரதான் வழங்கிய கடனை எப்போது வேண்டுமானாலும், ராதிகா ராய் ப்ரானாய் ராய் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 99.9% பங்குகளாக மாற்றிக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்ததாக ஸ்க்ரோல் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதுதான் தற்போது நடந்திருக்கிறது.

ஆக என் டி டி வி குழுமத்தில் தங்களுக்கான அதிகாரத்தை அல்லது கட்டுப்பாட்டை பல ஆண்டுகளுக்கு முன்பே ப்ரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகிய நிறுவனர்கள் இழந்து விட்டார்கள் என்பதையே இது இது சுட்டிக்காட்டுகிறது.

இதைவிட பெரிய விஷயம் என்னவெனில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான கௌதம் அதானி, இந்தியாவின் மிக நம்பகமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான என் டி டி வி ஐ கையகப்படுத்த நம்பர் டு பணக்காரரான முகேஷ் அம்பானியிடம் இருந்து, முகேஷ் அம்பானிக்கு மிக நெருக்கமான நபர்கள் கிட்டத்தட்ட தசாப்த காலத்திற்கு நிர்வகித்து வந்த நிறுவனத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?