”பாகுபலி மட்டும் வராமல் இருந்திருந்தால்” ராஜமௌலி பற்றி என்ன பேசினார் இயக்குநர் மணிரத்னம்? ட்விட்டர்
சினிமா

PS 2: ”பாகுபலி வராமல் இருந்திருந்தால்” ராஜமௌலி பற்றி என்ன பேசினார் இயக்குநர் மணிரத்னம்?

Keerthanaa R

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

பாகுபலி என்கிற படம், வெளியாகாமல் இருந்திருந்தால், குறிப்பாக அவர் அதனை இரண்டு பாகங்களாக எடுக்காமல் இருந்திருந்தால், பொன்னியின் செல்வன் படம் எடுத்திருப்பது சந்தேகம் தான் எனக் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் 2

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரதனம்.

நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், பிரபு என நடிகர்கள் பட்டாளமே ஒன்று கூடியுள்ளது திரைப்படத்தில்.

திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது பொன்னியின் செல்வன் முதல் பாகம். இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாகிறது.

இதனை தொடர்ந்து படக்குழு ஊர் ஊராக சென்று விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு புரொமோஷன்களில் இயக்குநர் மணிரத்னமும் கலந்துகொள்கிறார்.

அப்படி ஹைதராபாத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியவர், இயக்குநர் ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

“நான் முதலில் எனது தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். உங்களால் தான் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவானது.

நான் இதனை முன்பே கூறியிருக்கிறேன், மீண்டும் இப்போது கூறுகிறேன், நான் ராஜமௌலிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பாகுபலி என்கிற படத்தை அவர் எடுக்காமல் இருந்திருந்தால், குறிப்பாக இரண்டு பாகங்களாக அது வெளியாகமல் இருந்திருந்தால், பொன்னியின் செல்வன் உருவாகியிருக்காது. அவருக்கு எங்கள் சார்பில் மிகப் பெரிய நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்” என்று பேசினார்

Prabhas

”அவரை நேரில் சந்தித்தும் நன்றி கூறினேன். பொன்னியின் செல்வன் போன்ற மிகப் பெரிய படத்தை உருவாக்கும் பாதையில் என்னை இட்டுச்சென்றது பாகுபலி தான்.

ஒட்டுமொத்த திரைத்துறைக்குமே, வரலாற்று திரைப்படங்கள் உருவாக்க நம்பிக்கை அளித்துள்ளார். இந்தியாவின் வரலாறுகளை திரைப்படமாக எடுக்க கதவுகளை திறந்துவைத்தவர் ராஜமௌலி.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?