கர்பிணி பெண்

 

Facebook

ஹெல்த்

குழந்தை உருவாக உதவும் எளிமையான 10 இயற்கை வழிகள்…

மினு ப்ரீத்தி

குழந்தைப்பேறு உண்டாவதில் தாமதமாகக் காரணங்கள் நிறைய உள்ளன. குழந்தை உண்டாவதில் இருக்கக் கூடிய சிக்கல்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அந்தக் காலத்தில் பெரிதளவு விழிப்புணர்வு இல்லாமலே நிறையக் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இன்று ஒரு குழந்தை உண்டாகவே பல லட்சம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. மறைந்து போன உண்மைகள் என்னென்ன? அந்தக் கால ஆரோக்கிய வாழ்வு முறை எப்படி இருந்தது? ஆரோக்கியம் தரும் உடலமைப்பை எப்படி பெற்றனர்? என்னென்ன இயற்கை வழிகள் உள்ளன எனப் பார்க்கலாம்.

1.மலக்கழிவு நீக்கும் சிகிச்சை

உடலில் உள்ள மலக்கழிவு அதிகமாக இருந்தால், குடலின் நீளம், பருமன் அதிகரிக்கும். இது கர்ப்பப்பை, சினைப்பை, சினைக்குமாய் போன்றவற்றை மலக்கழிவு அழுத்தும். அமைப்பும் மாறுபடும். இயக்கமும் தடைப்படும். ஆகவே, குழந்தைப்பேறு வேண்டுமென்றால் குடல் சுத்தமாவது முக்கியம். வாயும் சேர்ந்து கொண்டால் அழுத்தம், மயக்கம் அதிகமாகும். சிறுநீர்ப்பையையும் அழுத்தும். இதனால் முதுகு வலி, இடுப்பு வலியும் உண்டாகலாம். விந்து வீணாவதற்கும், விந்து விரைவில் வெளியேறி விடுவதற்கும் மலச்சிக்கலும் அதன் வாயு அழுத்தமும் முக்கியக் காரணம். மலச்சிக்கல் தீரக் குடல் சுத்தம் செய்யும் ‘எனிமா கேன்’ பயன்படுத்தலாம். தண்ணீர் மூலம் குடலை சுத்தம் செய்யும் ‘எனிமா கேன்’ பயன்படுத்தலாம்.

குளியல்

2. நீண்ட நேர நீர் குளியல்

அடி வயிறு அதிகமாக வெப்பமாக இருப்பது பல பிரச்சனைகளுக்குக் காரணம். அதிக வெப்பத்தில் கரு முட்டைகள் உருவாகாது. விந்து அணுக்களும் உண்டாகாது. அதிக வெப்பத்தால் அவை பலம் குறையும். விரைவில் ஆற்றல் அழிந்து விடும். ஆகவே, குளியல் மிக முக்கியம். தினசரி இரண்டு வேளை சில்லென்ற தண்ணீரில் குளிப்பது வெப்பத்தை உடலில் தங்க விடாது. நீண்ட நேரம் குளிப்பதே ஒரு தெரப்பிதான். 15 நிமிடத்துக்குள் மேல் குளிப்பது உடல் வெப்பத்தைத் தணிக்கும். அடி வயிறு சூடாவதைத் தடுக்கும்.


3. வெந்நீர் தவிர்த்தல்

வெளியில் உள்ள நீர் நிலைகளில் எல்லாமே சில்லென்ற தண்ணீர் தான். வெந்நீர் கிடையாது. குளிர் காலங்களில், வட மாநிலங்களில், மலைப் பிரதேசங்களில் குளிரும் பனியும் அதிகம். அங்கே வெந்நீருக்குப் பதிலாக இளஞ்சூடான தண்ணீரில் குளிக்கலாம். அதிகச் சூடான நீரான வெந்நீரில் குளிப்பது உடலுக்கு நல்லதல்ல. குழந்தை உண்டாகாமல் இருக்கும். குழந்தை உருவாவதில் தாமதம் ஏற்படும். அடி வயிறு தொடர்பான சிக்கல்கள் வரும். செரிமான சக்தியும் குறைந்துவிடும். இதனால் கழிவுகள் உடலில் தேங்கி, கரு உண்டாவதில் சிக்கல் வரும்.

pregnant woman


4. கழிவு தேங்காமல் தடுத்தல்

கழிவுகளின் தேக்கமே நோய்கள் உருவாகக் காரணம். கழிவுகள் நீங்காவிடில் துன்பம்தான். சளி, வாயு, கொழுப்பு போன்ற கழிவுகள் நல்லதல்ல. அதிலும் பிசுபிசுப்புத்தன்மையுள்ள கழிவுகளால் கர்ப்பப்பையின் இயக்கங்கள் பாதிக்கப்படும். அதிக சளி, மலக்கழிவு, கொழுப்பு ஆகியவை குழந்தை உருவாகாமல் தடுக்கும் முக்கியக் காரணிகள். பசி,தாகம் அறிந்து சாப்பிட்டால் உடலில் கழிவுகள் தேங்காது.

5. ஈரத்துணி பட்டி வைத்தியம்

அடிவயிறு கழிவுகள் நீங்க, வயிற்றைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள ஆண்களும் பெண்களும் ஈரத்துணிப் பட்டி போடலாம். அடிவயிற்றில் தொப்புளுக்குக் கீழே தண்ணீரில் நனைத்த ஈரமான, கனமாகத் துண்டு அல்லது மடித்த வேட்டியைச் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும். இது போல ஒரு மணி நேரம் கட்டியிருக்கலாம். ஈரம் காய்ந்து விட்டாலும், மீண்டும் மீண்டும் தண்ணீரில் நனைத்துக் கட்ட வேண்டும். இந்த ஈரத்துணி பட்டியைக் குளிப்பதற்கு முன்பும் செய்யலாம் பின்பும் செய்யலாம். வெப்பம் அதிகமாக இருப்பதாக உணரும்போது செய்யலாம். அடி வயிறு குளிர்ச்சியாக இல்லாவிட்டால், அடிவயிற்றில் உள்ள உயிர்த்தன்மையை அழிக்கும்.

பெண்கள் இதைச் செய்ய, கர்ப்பப்பை முதலிய உள்ளுறுப்புகள் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகின்றன. சுறுசுறுப்பும் சக்தியும் பெறுகின்றன. குளிர்ச்சி காரணமாக உள் உறுப்புகள் சுருங்கும். தேவையில்லாமல் உப்பி, ஊதிப் பெருத்துப்போவது தவிர்க்கப்படும். பருத்துப்போன சினைப்பையும் அதன் குழாய்களின் இயக்கம் சீராகும். அசைவும் சுறுசுறுப்பும் சீராகும். வெப்பத்தால் வறட்சித்தன்மை ஏற்படுவது தவிர்க்கப்படும். மொத்தத்தில் இரு கருமுட்டைகள் உண்டாவதற்கும் கரு உண்டாகி குழந்தை வளர்வதற்கும் இந்த ஈரப்பட்டி சிகிச்சை நல்லது. இதை ஆண்களும் செய்யலாம். இதனால் விந்து சக்தி வீணாகாமல் தடுக்கும். ஈரமான உள்ளாடைகளை வாரத்தில் ஒரிருநாள் அணிவது இருபாலனிருக்கும் நல்லது. விந்து சக்தியில் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு இந்த இயற்கை மருத்துவம் செலவில்லாத தீர்வைக் கொடுக்கும்.

கர்பிணி பெண்

6. இடுப்பு குளியல்

இடுப்பு குளியல் எனும் சிகிச்சை. இதற்கான ஒரு தொட்டியில் தண்ணீர் ஊற்றி அதற்குள் உட்கார வேண்டும். இடுப்பும் வயிறும் மட்டும் தண்ணீருக்குள் இருக்கும். கால்கள் வெளியே இருக்கும். கால்கள் நனையக் கூடாது கைகளும் நனையக்கூடாது. இதை 30 நிமிடங்கள் செய்யலாம். இந்த இடுப்பு குளியலால் அடிவயிற்றில் உள்ள கருப்பை, சினைப்பைக் குழாய்கள், சுரப்பிகள், உறுப்புகள் அனைத்தும் குளிர்ச்சி காரணமாகச் சுறுசுறுப்பு அடைவதாலும் சுருங்குவதாலும் நன்மைகள் கிடைக்கின்றன. குழந்தைக்குத் திட்டமிடுவோருக்குக் கரு உண்டாக உதவும். இனவிருத்தி தொடர்பான உறுப்புகளில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். இந்தக் குளியல் பல உடல் நோய்களைத் தீர்க்கிறது என்று லூயி கூனே எனும் ஜெர்மனி நாட்டு நீர் சிகிச்சை நிபுணர் 100 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துள்ளார்.

குழந்தை

7. அரைப் பட்டினி விரதம்

விரதம் இருந்து பின்னர், குழந்தைக்காக முயற்சி செய்வது. தேங்காய், வாழைப்பழம் மற்றும் அனைத்து பழ வகைகள், சர்க்கரை இல்லாத உணவுகள், உப்பில்லாத பொங்கல் போன்ற அரைப் பட்டினி விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். தாகம் வந்த பிறகு தண்ணீர் குடிப்பது, பசித்த பிறகு சாப்பிடுவது, இரவில் சீக்கிரம் தூங்குவது போன்ற வழக்கத்திலிருந்து, வாழ்வியலைச் சரிசெய்துகொண்டு பின்பு குழந்தைக்காகச் சேர்க்கையில் ஈடுபடக் குழந்தை கிடைக்கும். இதை அரைவிரதப் பட்டினி முறை இயற்கையாகக் குழந்தை உண்டாக வழிவகுக்கும்.


8. உணவுகளில் மாற்றம்

நம் தாத்தா பாட்டிகளுக்கு 8-10 குழந்தைகள் வரை இருந்தன.அவ்வளவு ஆற்றல் எங்கிருந்தது வந்தது. அந்தக் காலத்தில் அப்படி என்ன சாப்பிட்டனர். எல்லாம் மிக எளிமையானவை. உள்ளூரில் விளைகின்ற உணவுகள். உழைப்பு இருந்தது முக்கியமாக உடலுழைப்பு. பருவ காலங்களில் பட்டினியான இருந்தனர். இது தானாக அமைந்தது.

மண் பானை பாத்திரங்கள் இருந்தன. எண்ணெய் உணவுகள் இவ்வளவு இல்லை, மிகமிகக் குறைவு. வெள்ளை சர்க்கரை இல்லை. உள்ளூர் தானியம், பருப்பு, காய், கீரை, பழ வகைகள்தான். அதுவும் சீசன் சமயம் மட்டும்தான் கிடைக்கும். உப்பு அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை. மழைக்காலத்தில் உப்பு கிடைக்காது. விருந்துகளில் மட்டுமே உப்பு இருக்கும். தினசரி உப்பு பயன்பாட்டில் இல்லை. ‘உப்பில்லா பத்தியம்’ உடலுக்கு நல்லது. உயிர் உருவாவதற்கும் நல்லது. உப்பு இருக்கும் உணவுகளைச் சாப்பிட அதிகம் தூண்டுகிறது நம் நாக்கு. இதனால் உடல் பருமன் இன்னும் சில நோய்கள். இத்தனை டிபன் வகைகள் இல்லை. எப்போதாவது இட்லி, தோசை எல்லாம். சிறுதானியம், பாரம்பரிய அரிசி வகைகள், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் கஞ்சி, களி தான் உணவுகளாக இருந்தன.சமைத்த உணவுகள் ஒரு வேளையோ இருவேளையோதான். உணவு குறைவு. ஆரோக்கியம் நிறைந்து இருந்தது. இன்று உணவுகள் பலவிதம். நோய்களும் பலவிதம்.

ஆரோக்கிய உணவு

9. டிபன் வகைகள் தவிர்த்தல்

காலையில் டிபன் இல்லாமல் எலுமிச்சை ஜூஸ் தேனுடன் கலந்து குடிக்கலாம். அல்லது சீரகம், தனியா, சுக்கு ஆகிய கலந்த பானத்தை நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்து ஆறவைத்துப் பின் பருகலாம். காலை உணவு பழங்களாக இருப்பது நல்லது. சீசன் பழங்கள் நல்லது. சாறு உள்ள பழங்கள் இன்னும் நல்லது. ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், மாதுளை பப்பாளி சதையும் சாறும் உள்ளவை. வாழைப்பழம், தேங்காய், பேரீச்சை சிறந்த காலை உணவு.

பசி அதிகம் இருந்தால் இதனுடன் நட்ஸ் சேர்க்கலாம். முளைக்கட்டிய கம்பு, ராகி, பச்சைப்பயறு நல்லது. மதியம் பசிக்கையில் தனிச்சீர் உணவு. கொஞ்சம் சாதம் கீரைகள் மற்றும் காய்கறிகள் போதுமானது. பழங்களும் சாப்பிடலாம். இரவில் பசிக்காது. அப்படிப் பசித்தால் பழங்களே போதுமானது. தாமதமாக இரவு உணவு சாப்பிடக் கூடாது. 7.30க்குள் இரவு உணவை முடிப்பது நல்லது. பால் உணவுகளைத் தவிர்ப்பது மிக மிக நல்லது.

கர்பிணிப் பெண்

10. இயற்கை உணவுகளைச் சேர்த்தல்

குழந்தை உருவாக உதவும் உணவுகள், எல்லா வகைப் பழங்கள். நட்ஸ், தேங்காய், தேங்காய் பூ, இளநீர், நுங்கு, பனம்பழம், கரும்பு, தேன், பச்சையாகச் சாப்பிடக் கூடிய காய்கள், இலைகள், வெள்ளரி, கேரட், தக்காளி, வெண்டை, புதினா, கொத்தமல்லி… எளிமையாக வேக வைத்து உண்ணக்கூடிய நீர்நாய்கள். வெள்ளைப்பூசணி, சுரை, புடலை, பீர்க்கு, அகத்திக்கீரை, முருங்கை கீரை. முளைக்கட்டிய தானியங்கள் கம்பு, ராகி, சோளம், எள், நிலக்கடலை, கொண்டைக்கடலை, நரிப்பயறு, தட்டப்பயறு, துவரை, கொள்ளு, பச்சைப்பயறு ஆகியவை. பச்சரிசி, பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், அவல், ஊறிய பிற தானியங்கள். இவையெல்லாம் ஆரோக்கியம் தரும் உணவுகள். கழிவுகளை அதிகம் சேர்க்காத உணவுகள் இவை.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?