Health: அரிசி தண்ணீரை சருமம், முடிக்கு பயன்படுத்துவது நல்லதா?
Health: அரிசி தண்ணீரை சருமம், முடிக்கு பயன்படுத்துவது நல்லதா? canva
ஹெல்த்

Health: அரிசி தண்ணீரை சருமம், முடிக்கு பயன்படுத்துவது நல்லதா?

Keerthanaa R

ஷாம்பூ, ஃபேஸ் க்ரீம் போன்றவை அறிமுகப்படுத்தபடுவதற்கு முன், இயற்கையாக வீட்டில் கிடைத்தவற்றை தான் நாம் முடிக்கும் சருமத்திற்கும் பயன்படுத்திவந்தோம்.

சீயக்காய், தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், வெந்தயம் மஞ்சள், தேன், தக்காளி, தயிர், கற்றாழை போன்றவற்றை பயன்படுத்தினோம். சிலர் அரிசி தண்ணீரை, அதாவது, அரிசி ஊறவைத்த தண்ணீர் அல்லது கஞ்சியைக் கூட பயன்படுத்தினர்.

இப்போது வரும் பிரபல ஷாம்பூ நிறுவனங்கள் கூட அரிசி தண்ணீர் ஷாம்புவை விற்கின்றனர்.

இதனை பயன்படுத்துவது ஆரோக்கியம் தருமா?

சருமத்திற்கு குளிர்ச்சி

அதிகமாக வெயில் படுவதால் சருமத்தில் ஏற்படும் எரிச்சலில் இருந்து விடுபட அரிசி தண்ணீர் உதவுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சி அளித்து, சருமத்தை இதமாக்குகிறது

கூந்தல் மென்மையாகும்

தொடர்ந்து, தேவையான அளவில் அரிசி தண்ணீரை கூந்தலுக்கு பயன்படுத்திவர, தலைமுடி பளபளப்பாகும்.

வயது மூப்பை குறைக்கும்

இதிலுள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் சருமத்தில் வயது மூப்பு காரணிகளை எதிர்த்து போராடுகிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள் குறைகிறது

முடி வளர உதவும்

முடி நீளமாக வளர இதிலுள்ள அமினோ ஆசிட்கள் உதவுகின்றன. இது உடைந்த முடியை சரியாக்கி, புதிய முடி வளர தூண்டுகிறது

oily scalp

அரிசி தண்ணீரை பயன்படுத்துவது oily scalpஐ தவிர்க்க உதவுகிறது. முடி உலராமலும், அதே சமயம் அதிக எண்ணெய் தன்மை இல்லாமலும், சம்நிலையில் இருக்க உதவுகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?

மாம்பழ நகரம் முதல் தொழில்துறை மையம் வரை: சேலத்தின் கண்கவர் கதை!