அழுகை என்பது மனிதர்களுக்கு இருக்கும் இயல்பான ஒரு உணர்ச்சி தான் என்றாலும், பொது வெளியில் எளிதில் அதை நாம் வெளிப்படுத்த விரும்புவதில்லை. அழுதால், என்னை அவர் வீக் ஆக நினைத்துவிடுவார், அழுமூஞ்சி என்ற பட்டம் கட்டிவிடுவார் என்ற எண்ணம் இப்போதும் பலருக்கு உண்டு. சிலருக்கு அதிக கோபம் வந்தாலும் அழுகை வரும்.
ஆனால், அழுவதனால் உடலுக்கு ஆரோக்கியம் தான் என்று கூறப்படுகிறது.
நீங்கள் சிறு விஷயத்திற்கும் கண்ணீர் வடிப்பவராக இருந்தால், இந்த கட்டுரை உங்களுக்கானது.
லாக்ரிமல் க்லாண்ட் என்றழைக்கப்படும் கண்ணீர் சுரப்பிகள் கண் விழிக்கு (eyeball) மேல் அமைந்துள்ளன, ஒவ்வொரு முறையும் நாம் கண்களை சிமிட்டும்போதும் இந்த சுரப்பிகளிலிருந்து சுரக்கும் கண்ணீர் திரவம் கண்களுக்கு வழங்கப்படுகிறது.
கண்ணீரில் பல நுண்ணுயிர் புரதங்கள் உள்ளன. அந்த புரதங்களில் ஒன்று தான் லைசோசைம் எனப்படும் திரவம். இவை பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் தாக்கத்திலிருந்தும், மற்ற இன்ஃபெக்ஷன்களிலிருந்தும் நம் கண்களை காப்பாற்ற உதவும். எளிமையாக சொன்னால், நம் கண்களை சுத்தம் செய்கிறது கண்ணீர்.
அழுகை மன அழுத்தம் மற்றும் வலியைக் குறைக்க உதவும் ஒரு சாதாரண மனிதனின் செயல்பாடு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் மற்றவருக்காக பச்சாத்தாபம் (empathy) மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சியாகவும் இருக்கிறது.
கண்ணீர் வடிவதனால் உடலில் எண்டார்ஃபின் மற்றும் ஆக்சிடோசின் ஆகியவை வெளியாகின்றன. ஃபீல் குட் கெமிக்கல் என்றழைக்கப்படும் இவை, நம் உடல் மற்றும் மன வலியை குறைக்கிறது. மேலும், ஸ்ட்ரெஸிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது கண்ணீர்.
கண்ணீர் கண்களில் ஈரப்பதத்தை நிலைத்து வைக்க உதவுகிறது. இதனால் கண்கள் வறண்டு போகாமலும், பார்வை மங்காமலும் பார்த்துகொள்கிறது. மேலும், கண்களில் தூசு, துகள்கள் இருந்தால், அவற்றால் கண்களில் எரிச்சல் ஏற்படும். ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும்போதும் வெளியாகும் கண்ணீர் திரவம், தூசு துகள்களை நீக்கி, எரிச்சலை தடுக்க உதவுகிறது.
பிறந்த குழந்தைகளின் முதல் அழுகை மிக முக்கியம். கருவில் இருக்கும்போது, தொப்புள் கொடி வழியாக குழந்தைகள் சுவாசத்தை பெறும். வெளிவந்தவுடன் அவர்கள் தாங்களாகவே சுவாசிக்கத் தொடங்க வேண்டும். அதற்கு அழுகை உதவுகிறது. மேலும், முதல் அழுகை ஒரு குழந்தையின் நுரையீரலை வெளி உலக வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் உதவுகிறது.
கண்ணீரை சுரக்கும் இந்த லாக்ரிமல் சுரப்பியில் நரம்பு வளர்ச்சிக்கான புரதம் ஒன்று இருக்கிறது. இது நியூரான்களின் வளர்ச்சிக்கு முக்கியமான அம்சமாகும். இதன் காரணமாக ஏற்படும் நியூரல் பிளாஸ்டிசிட்டி அழும் போது மனநிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாக அறியப்படுகிறது.
மேலும், அழுகை நரம்பு மண்டலத்தில் ஒரு இனிமையான விளைவை ஏற்படுத்தும். இது உடலையும் மனதையும் ஓய்வெடுக்க உதவுகிறது.
நாம் சிந்தும் கண்ணீருக்கு உடலளவில் ஏற்படும் நன்மைகள் இவை. இனி எப்போதும், அழுகையை உங்கள் பலவீனத்தை குறிக்கும் சின்னமாக பார்க்கவேண்டாம்! முக்கியமாக அழுகை பாலினம் சார்ந்ததும் அல்ல. ஆணோ, பெண்ணோ அழுகை என்பது இயல்பான மனித உணர்வு என்பதை நினைவில் கொள்ளலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust