baby Twitter
இந்தியா

தாயின் பாசப் போராட்டம்: 3 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த குழந்தை- பின்னணி என்ன?

Priyadharshini R

பிரசவத்தின் போது ஏற்பட்ட குழப்பத்தால் மாறிப்போன குழந்தையை 3 ஆண்டுகளுக்குப் பின்பு தாய் கண்டுபிடித்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

அசாம் மாநிலம் பார்பேட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்மா கானம் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை இறந்துள்ளதாகச் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

baby

இதனால் மனமுடைந்த நஸ்மா கானம் வீடு திரும்பிய பின் யோசித்து, குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை துடிப்புடன் தானே இருந்தது என்று மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று அதே நாளில் வேறு யாருக்கும் குழந்தை பிறந்துள்ளதா என்று விசாரித்துள்ளார்.

அப்போதுதான் உண்மை தெரிகிறது. அதே தினத்தில் நஸ்மா காதுன் என்ற பெண்மணியும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டதும், இருவருக்கும் ஒரே சமயத்தில் ஆண் குழந்தை பிறந்ததும் தெரியவந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த நஸ்மா கானம், அந்தக் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நீண்ட வழக்காடலுக்கு பிறகு 2021-ம் ஆண்டு குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த நீதிமன்றமும் உத்தரவிட்டது.

அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைக்கும், நஸ்மா கானத்துக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன் முடிவு சமீபத்தில் வெளியானது. அதில், அந்தக் குழந்தை நஸ்மா கானத்துக்குப் பிறந்ததுதான் என்றும், பெயர் குழப்பத்தால் குழந்தை மாற்றிக் கொடுக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

தாயின் பாசப் போராட்டத்தால் தனது குழந்தையை 3 ஆண்டுகளுக்குப் பின்பு கண்டுபிடித்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?