5 best sites for dark tourism in india with deep history Twitter
இந்தியா

இந்தியா: எலும்புக்கூடு ஏரி முதல் செல்லுலார் சிறை வரை - எங்கெல்லாம் திகில் பயணம் செல்லலாம்?

Priyadharshini R

பயண பிரியர்கள் இப்போது எல்லாம் வித்தியாசமான இடங்களை தேடி தேடி சென்று பார்த்து வருகின்றனர். திகிலான இடங்கள், கைவிடப்பட்ட தலங்கள் என பல இடங்களுக்குச் செல்ல மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றன. இந்த வரிசையில் இணைகிறது டார்க் டூரிசம்.

இந்த கான்செப்ட் சற்று வித்தியாசமாகத் தோன்றினாலும், இதனை பார்க்க, அந்த இடத்தை பற்றி தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஆழமான நீண்ட வரலாற்றைக் கொண்ட டார்க் டூரிசம் இந்தியாவில் எங்கு இருக்கிறது. இந்த இடங்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.

ஜாலியன் வாலாபாக், அமிர்தசரஸ்

அமிர்தசரஸ், ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கொடூரமான சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், அதைக் குறிப்பிடுபோது அதன் தாக்கம் இன்றும் இருக்கிறது என்றே தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த சோகமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. ஏப்ரல் 13, 1919 அன்று, ஜெனரல் டயரின் உத்தரவின் பேரில் பிரிட்டிஷ் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

நீங்கள் இப்போது இந்த இடத்திற்குச் சென்றால், சுவர்கள் மற்றும் குண்டு துளைகளை நீங்கள் காணலாம். அந்த இடத்தைப் பார்க்கும் போது சுதந்திரத்தின் உண்மையான மதிப்பை நீங்கள் உணர்வீர்கள்.

செல்லுலார் சிறை

செல்லுலார் சிறை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் காலனித்துவ சிறைச்சாலையாக இருந்தது. இது குறிப்பாக அரசியல் கைதிகளை நாடு கடத்த ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது.

கொடுர தண்டனை வழங்கும் இடம், தனிமைப்படுத்தப்பட்ட இடம் என்று விவரிக்கப்படும் செல்லுலார் சிறை நிறைய துன்பங்களைத் தாங்கியுள்ளது. அதன் சுவர்கள் அதற்கு சாட்சியமளிக்கின்றன.

இப்போது, இந்த வளாகம் ஒரு தேசிய நினைவு நினைவுச்சின்னமாக செயல்படுகிறது.

காந்தி ஸ்மிருதி

காந்தி ஸ்மிருதி என்பது மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட இடம். அவர் தனது வாழ்க்கையின் கடைசி 144 நாட்களைக் கழித்த இடம்.

முதலில், இது இந்திய தொழில் அதிபர்களான பிர்லா குடும்பத்தின் இல்லமாக இருந்தது, இப்போது இது காந்தி மல்டிமீடியா அருங்காட்சியகத்தின் தாயகமாக உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் காந்தியின் வாழ்க்கை மற்றும் இறப்பு தொடர்பான பல கட்டுரைகள் உள்ளன. காந்தி வாழ்ந்த பாதுகாக்கப்பட்ட அறையையும் பார்வையாளர்கள் பார்வையிடலாம்.

இந்தியாவின் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், இந்த இடத்திற்குச் சென்று வரலாம்.

புஜ்

1956இல் புஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மடிந்தன.

மீண்டும் இந்தியக் குடியரசு நாளான டிசம்பர் 26, 2001 காலையில் 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், புஜ் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் 20,000 பேர் உயிரிழந்தன. மேலும் பல கட்டிடங்கள் இடிந்து பெரும் பொருள் இழப்புகளையும் சந்தித்தது.

மக்கள், காலத்தின் சோதனையை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதையும், அந்த இடத்தின் இருண்ட தன்மையையும் நீங்களே நேரில் பார்க்க புஜ்க்குச் செல்லுங்கள்.

எலும்புக்கூடு ஏரி

எலும்புக்கூடு ஏரி என்று பிரபலமாக அறியப்படும் ரூப்குண்ட் ஏரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 16500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 1942 ஆம் ஆண்டில் நிலவிய கடுமையான கோடையில் எலும்புக்கூடுகள் முதன்முதலில் கவனிக்கப்பட்டன. ஒரு பிரிட்டிஷ் வனக் காவலர் ஏரியின் ஓரங்களில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கிடப்பதையும் மிதப்பதையும் கவனித்தார்.

முதலில், இந்த எலும்புக்கூடுகள் போரின் போது கொல்லப்பட்ட ஜப்பானிய வீரர்களின் எச்சங்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் இந்த கோட்பாடு 2004 இல் தவறானதாகக் கருதப்பட்டது. எலும்புக்கூடு எச்சங்கள் கி.பி 850 க்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?