பீகார் : ஒரே ஊரில் 300 ஐஐடி மாணவர்கள் - கல்வியில் கலக்கும் அடடே கிராமம்! Students
இந்தியா

பீகார் : ஒரே ஊரில் 300 ஐஐடி மாணவர்கள் - கல்வியில் கலக்கும் அடடே கிராமம்!

Antony Ajay R

பிகார் கல்வி அறிவில் பிந்தங்கிய மாநிலம் என்பது தான் நமக்குத் தெரியும். இதனால் அந்த மாநிலத்தின் மீது நமது மதிப்பீடு என்பது மோசமான ஒன்றாக இருக்கிறது.

ஆனால் அங்கு ஒரு கிராமம் ஒவ்வொரு வருடத்துக்கும் 20க்கும் மேற்பட்ட பொறியாளர்களை உருவாக்கி வருகிறது. அதுவும் ஐஐடியில் படித்தவர்களை. வியப்பாக இருக்கிறது அல்லவா?

மன்பூர் மாவட்டத்தில் இருக்கும் பாட்வா டோலி என்பது தான் அந்த கிராமத்தின் பெயர். 10,000 பேர் வசிக்கும் அந்த கிராமத்தில் 300 பேர் ஐஐடியில் படித்த இஞ்சினியர்களாக இருக்கின்றனர். 2017ம் ஆண்டில் மட்டும் 20 பேர் ஐஐடியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

ஐஐடில் சேரவேண்டும் என்பது பல மாணவர்களின் கனவு எனலாம். பெரும்பாலானவர்களுக்கு இந்த கனவு நிறைவேறுவதில்லை. தமிழக கிராமப்புற மாணவர்கள் பலருக்கும் ஐஐடி போன்ற உயர் தர கல்வி நிறுவனங்கள் பற்றியும் அதற்கான நுழைவுத்தேர்வுகள் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாட்வா டோலியில் 1992ம் ஆண்டு ஜித்தேந்திர பிரசாத் என்பவர் முதன்முதலாக ஐஐடியில் தேர்ச்சிபெற்றார். அவரால் ஈர்க்கப்பட்ட பல மாணவர்கள் தொடர்ந்து ஐஐடியில் இணைந்தனர்.  

1990களில் பாட்வா டோலின் நெசவாளர்கள் தங்கள் தலைமுறையினரின் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கினர். 

2000ம் ஆண்டு ஜித்தேந்திர பிரசாத் அமெரிக்காவில் பணி செய்யத் தொடங்கினார். அதன்பிறகு கிராமத்தில் இருந்த மாணவர்கள் அவரைப்போல ஆகவேண்டும் என நினைத்தனர்.

பட்வா டோலியின் முன்னாள் பொறியியல் மாணவர்கள் நவ்பிரயாஸ் என்ற அமைப்பை உருவாக்கினர், இது ஐஐடிக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவ உதவுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?