HIV Twitter
இந்தியா

மூன்று வயது குழந்தைக்கு HIV : இரத்த வங்கி மீது புகார் - என்ன நடந்தது?

Priyadharshini R

ஹைதராபாத்தில் உள்ள ரத்த வங்கியின் அலட்சியத்தால் மூன்று வயது குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலசீமியா என்ற மரபு சார்ந்த இரத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த குழந்தைக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்திய செஞ்சிலுவைச் சங்கம் (Indian Red Cross Society, IRCS) என்ற தன்னார்வ ரத்த வங்கி மூலம் ரத்தம் ஏற்றி வந்துள்ளனர்.

இதற்கிடையில் ஜூலை 20 அன்று அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்ட பிறகு, இரத்த பரிசோதனையை செய்தபோது அந்த 3 வயது குழந்தைக்கு எச்ஐவி பாசிட்டிவ் என வந்தது.

இந்த நிலையில் குழந்தையின் பெற்றோரின் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய செஞ்சிலுவை சங்கம் (IRCS) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தை இதுகுறித்து கூறுகையில்,

"எனது குழந்தைக்கு 7 மாதம் இருக்கும் போது தலசீமியா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ரத்தம் ஏற்றி வருகிறோம்.

தற்போது செஞ்சிலுவை சங்க ரத்த மையம் எங்களின் குழந்தைக்கு எச்.ஐ.வி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

ஆனால் எனக்கும் என் மனைவிக்கும் எச்.ஐ.வி நெகட்டிவ் என தான் வந்துள்ளது. ரத்த மையத்தின் அலட்சியத்தால் இது நடந்திருக்கிறது.

இது போன்று மற்ற குழந்தைகளுக்கு நடக்கக் கூடாது" என்று தெரிவித்திருக்கிறார்.

நன்கொடையாளர்களிடமிருந்து இரத்தத்தை சேகரிக்கும் முன், தானம் செய்யப்பட்ட இரத்தத்தில் தொற்று இல்லை என்பதை அந்த ரத்த வங்கியில் உள்ளவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இரத்த வங்கியின் அலட்சியத்தாலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?