குஜராத் : தலித் தொழிலாளரை காலை நக்க வைத்து துன்புறுத்திய பெண் தொழிலதிபர் - என்ன நடந்தது? Twitter
இந்தியா

குஜராத் : தலித் தொழிலாளரை காலை நக்க வைத்து துன்புறுத்திய பெண் தொழிலதிபர் - என்ன நடந்தது?

Antony Ajay R

குஜராத் மாநிலம் மொர்பியில் பெண் தொழிலதிபர் ஒருவர் முன்னாள் பணியாளரை தனது காலணியை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்ணுக்கு கால் செய்தும் மெஸ்ஸேஜ் செய்தும் தனது 18 நாள் சம்பளத்தை கேட்டிருக்கிறார் முன்னாள் ஊழியர். அவரை தனது காலணியை நக்க வைத்து, அதே நேரத்தில் 5 நபர்களால் பெல்ட்டாலும் முதுகில் அடிக்க வைத்துள்ளார்.

நிலேஷ் தல்சானியா என்ற அந்த பாதிக்கப்பட்ட ஊழியர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் தொடர்பாக நிறுவன ஊழியர் விபூதி என்று அழைக்கப்படும் ரனிபா படேல் மற்றும் சிலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தனது சம்பளத்தைக் கேட்டு அடிக்கடி கால் செய்ததால் அவரை துன்புறுத்தியதுடன் அவரை வலுக்கட்டாயமாக மன்னிப்புக் கேட்கவைத்து வீடியோ எடுத்துள்ளனர்.

ஓம் படேல், ராஜ் படேல், பரீக்ஷித், டிடி ரபாரி மற்றும் ஒரு நபர் இதனுடன் தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தல்சானியா கடந்த மாதம் பாதியில் வேலையை விட்டு நிறுத்தப்பட்டுள்ளார். முதலாளியான படேலிடம் தனது பாக்கி கூலியைக் கேட்க தனது நண்பர் பாவேஷ் மக்வானா மற்றும் சகோதரர் மேகுல் உடன் சென்றிருக்கிறார்.

இவர்கள் மூவரையும் ரபாரி படேல் மற்றும் ராஜ் படேல் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களுடன் இன்னும் இருவர் சேர்ந்துகொள்ள அவரை நிறுவனத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பெல்டால் அடித்தவர்கள் அவரது சாதியைக் குறிப்பிடும் வசைச் சொற்களால் திட்டியுள்ளனர். பின்னர் தல்சானியா மற்றும் அவரது நண்பர்கள் அங்கு பணம் பறிக்க வந்ததாகவும் அதற்கு மன்னிப்புக் கேட்பதாகவும் இரண்டு வீடியோக்களை பதிவு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர்.

பின்னர் ரனிபா படேல் என்ற பெண்ணின் காலை நக்க கட்டாயப்படுத்தியதுடன் இனி தொழிற்சாலை இருக்கும் பகுதியில் பார்த்தால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

ரனிபா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் டைல்ஸ்களைத் தயாரித்து வருகிறது. பெரும்பாலும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டுகின்றனர்.

இந்த நிறுவனத்தில் இருந்து அக்டோபர் 15ம் தேதி நிறுத்தப்பட்ட தல்சானியா நவம்பர் 5ம் தேதி தான் பணியாற்றிய நாட்களுக்கான சம்பளம் கிடைக்கும் என எண்ணி முதலாளிக்கு கால் மற்றும் மெஸ்ஸேஜ் செய்துள்ளார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவிக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?