கோலி டிவிட்டர்
இந்தியா

IND vs BAN: டிவிட்டரில் டிரெண்டாகும் #cheating - என்ன காரணம்?

Keerthanaa R

நேற்று நடந்து முடிந்த இந்தியா - வங்கதேசம் அணி போட்டியில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு டிவிட்டரில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் இந்திய அணி மோசடி செய்து வென்றது என விவாதித்து வருகின்றனர். மேலும் சீட்டிங் என்ற ஹாஷ் டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

20 ஒவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு போட்டிகளை விளையாடியுள்ள இந்திய அணி 3ல் வென்றுள்ளது.

முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் இந்தியா வென்றது.

அந்த போட்டியில் கடைசி ஒவரில் வீசப்பட்ட 4வது பந்து சற்று உயரமாக வீசப்பட்டது. இதை நோ பால் ஆக அறிவிக்கும்படி இந்திய வீரர் கோலி அம்பையர்களிடம் விவாதித்தார். சோதித்து பார்த்த பின்னர் நடுவர் அதை நோ பால் என அறிவித்தார். இது இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் சாதகமாக அமைந்தது.

இதே போல வங்கதேசத்திற்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் 17வது ஒவரில் வீசப்பட்ட பந்து ஒன்று சற்று தூரமாக எறியப்பட்டது. இதை வைட் பால் ஆக அறிவிக்க அவர் நடுவரிடம் கேட்டிருந்தார். நடுவர்களும் அதை வைட் என அறிவித்தனர். இந்திய அணி 20 ஒவர் முடிவில் 184 ரன்கள் எடுத்தது.

பின்னர் வங்கதேசம் களமிறங்கி 7 ஒவர் வரை விளையாடியது. 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், எந்த விக்கெட்டும் பறிகொடுக்காமலிருந்தபோது, மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்றதும், ஒவர்கள் குறைக்கப்பட்டு மீண்டும் போட்டி துவங்கியது. மழைக்கு பின்னர் விக்கெட்கள் விழத் துவங்கியதால் போட்டி இந்திய அணிக்கு சாதகமாக திரும்பியது. 

மற்றொரு புறம் வங்கதேச வீரர்கள் இந்திய பவுலர்களை துவம்சம் செய்தனர். வெறும் 5 ரன்கள் வித்தியாசத்திலேயே இந்தியா நேற்று வென்றது. 

இந்தியாவின் வெற்றியால், பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்வது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் இந்தியா மோசடி செய்து வென்றது என கூறி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேட்கப்பட்ட நோ பால், மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக கேட்கப்பட்ட வைட் ஆகிய விஷயங்களை எடுத்துக்காட்டி, இந்தியா சீட்டிங் செய்துள்ளதாகக் கூறுகின்றனர்.

மேலும் நேற்றைய ஆட்டத்தில் வழக்கமாக அனுசரிக்கப்படும் டக்வர்த் லூயிஸ் முறை கணக்கிடப்பட்டிருந்தால் வங்கதேசம் வென்றிருக்கும். இந்தியாவின் வெற்றியை கருத்தில் கொண்டே மழை நின்ற பிறகு ஆட்டத்தை மீண்டும் தொடங்கியதாகவும் ஒரு தரப்பு கூறுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?