Indian & Japanese scientists discover 600-million-year-old ocean water in Himalayas Twitter
இந்தியா

600 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் நீரை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் - எங்கே?

Priyadharshini R

உலகின் பல்வேறு இடங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றன. அதில் பல விஷயங்களை கண்டுபிடித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் கூட்டாக 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நீர்த்துளிகளை கண்டுபிடித்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிகட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இமயமலையின் உச்சியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இமயமலையில் உச்சியில் உள்ள படிமங்களை ஆராய்ந்து பார்த்தபோது அதில் நீர்த் துளி சேகரமாகி இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

அந்த நீர்த் துளியை ஆய்வு செய்து பார்த்ததில், அது 600 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் நீர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது 60 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது.

இதன் மூலம் அங்கு, 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்திருக்கலாம் என்றும் அந்தக் கடலிலிருந்து அந்த நீர்த் துளி எஞ்சி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்

இது குறித்து வல்லுனர்கள் கூறுவதாவது,

"அந்த காலத்தில் கடல் இருந்தது குறித்து கண்டுபிடித்துள்ளோம், பழமையான கடலின் ஆண்டை கணித்துள்ளோம். ஆனால், அந்தக் கடலின் தன்மை குறித்து பெரிய விவரங்கள் தெரியவில்லை.

தற்போது இருக்கும் கடல்களுக்கும் அப்போதைய கடலுக்கும் என்ன ஒற்றுமை வேற்றுமை இருக்கிறது என்பது குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த விவரங்கள் முழுமையாக கிடைக்கும்பட்சத்தில், அது புவியின் காலநிலை வரலாற்றை புரிந்துகொள்ள உதவியாக அமையும்" என்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?