”நாங்கள் இரு போர் செய்கிறோம்” போராட்ட களத்தில் பயிற்சி செய்யும் இந்திய மல்யுத்த வீரர்கள்! twitter
இந்தியா

”நாங்கள் இரு போர் செய்கிறோம்” போராட்ட களத்தில் பயிற்சி செய்யும் இந்திய மல்யுத்த வீரர்கள்!

NewsSense Editorial Team

இந்திய மல்யுத்த வீரர்களான சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட் உள்ளிட்டோர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரணுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரிஜ் பூஷன் சரண் மீது பாலியல் குற்றாச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரை எதிர்த்து மல்யுத்த வீரர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வருகின்றனர்.

தற்போது அவர்களுடைய போராட்டம் சாலைகளுக்கு வந்திருக்கிறது. மல்யுத்த வீரர்கள் காலை நேரப் பயிற்சிக்கு மேட் (mat) கொடுக்கப்படாததால், அவர்கள் சாலையிலேயே இறங்கி பயிற்சி செய்யத் தீர்மானித்துள்ளனர்.

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் உட்பட, பல்வேறு தகுதிப் போட்டிகள் நடைபெற இருப்பதால், மல்யுத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், நீதிக்கான போராட்டத்தோடு சேர்த்து பயிற்சியையும் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

இது குறித்து மல்யுத்த பயிற்சியாளர் சுஜித் மான் கூறுகையில்,

“எங்களால் பயிற்சியை கைவிட முடியாது. எங்களுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டி, அதிலேயே ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் எல்லாம் நடைபெறவிருக்கின்றன.

இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த போராட்டம் தொடரும் என்று தெரியவில்லை. எனவே எங்களுக்குள் பேசிக் கொண்டு, எங்கள் பயிற்சிகளை இப்படியே மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கிறோம்”

தொடர்ந்து பேசிய சங்கீதா போகத் “எங்கள் பயிற்சியைக் கைவிட்டு, இந்த நாட்டின் மக்களுக்கு ஏமாற்றமளிக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இரண்டு போர் செய்கிறோம். ஒன்று பெண்களுக்கான நீதிக்காகவும், மற்றொன்று பதக்கங்களுக்காகவும். எங்களுக்கு சாலையில் பயிற்சி செய்வதைத் தவிர வேறு வழி இல்லை"

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பேசியபோது,

“இந்த போராட்டத்தோடு பயிற்சியும் நடக்கும். எங்களால் காலையில் பயிற்சி செய்ய முடியும். மற்ற விளையாட்டு வீரர்களும் எங்களோடு வந்து இணைந்து கொள்ள வேண்டும் என்கிற செய்தியைச் சொல்ல விரும்புகிறோம். நாங்கள் யாருடைய பயிற்சியையும் கெடுக்க விரும்பவில்லை. போராட்டத்தில் அமர்ந்தபடியே எங்களால் 10 - 15 பேருக்கு பயிற்சியளிக்க முடியும்.” என்றார்.

இந்தியாவின் ஆகச் சிறந்த முன்னணி மல்யுத்த வீரர்கள் களத்தில் இறங்கி நடத்தும் போராட்டத்துக்கு இடது சாரிகள், காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற பல கட்சிகளின் ஆதரவு கிடைத்திருக்கிறது.

அக்கட்சிகள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.இது மிகவும் தீவிரமான பிரச்னை என உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. மேற்கொண்டு இந்த விவரம் தொடர்பாக காவல்துறை உட்பட பல தரப்பினருக்கும் நோட்டிஸ் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

கடந்த ஜனவரி மாதம் ஜந்தர் மந்தர் மைதானத்தில் இந்த போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் முன்னெடுத்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?