சிறுத்தை twitter
இந்தியா

நாயை துரத்திக்கொண்டு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை - வைரல் வீடியோ

Keerthanaa R

மகாராஷ்டிராவில் ஒரு வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் சதரா என்ற நகரில் அமைந்துள்ளது ஹெல்வக் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சுதீர் கராண்டே என்பவரது வீட்டில் சிறுத்தை நுழைந்துள்ளது.

leopard

நேற்று வியாழன் அன்று இரவு, துர்கை சிலை கரைப்பு முடிந்த பின்னர் சுதீர் மற்றும் அவரது குடும்பத்தினர், வீட்டிற்கு வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது சத்தம்போட்டுக்கொண்டே அவர்களது வளர்ப்பு நாய் ஓடி வர, அந்த நாயை துரத்திக் கொண்டு சிறுத்தை ஒன்றும் வீட்டிற்குள் நுழைந்தது.

இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மிகவும் கவனமாக செயல்பட்டு சுதீர் வீட்டின் கதவுகளை வெளிப்புறமாக பூட்டினார். இதனால் வெளியேற முடியாமல் சிறுத்தை வீட்டிற்குள் அகப்பட்டுக் கொண்டது.

இதற்குள் அங்கு வந்த கிராமத்தினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். கடும் முயற்சிகளுக்கு பின் இன்று காலை சிறுத்தை பிடிபட்டது.

சிறுத்தையை மீட்ட வனத்துறையினர் கூறுகையில், "பிடிபட்ட சிறுத்தைக்கு வயது ஒன்று தான். அதன் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் ஆரோக்கியம் மேம்பட்ட பின்னர் காட்டில் விடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?