Madhya Pradesh: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமி - அறிவித்த உதவிகளை செய்யாத அரசு!
Madhya Pradesh: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமி - அறிவித்த உதவிகளை செய்யாத அரசு! Twitter
இந்தியா

Madhya Pradesh: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமி - அறிவித்த உதவிகளை செய்யாத அரசு!

Antony Ajay R

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் 12 வயது சிறுமி 24 வயது ஆட்டோ ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "உயிர் பிழைத்த சிறுமிக்கு மருத்துவ, உளவியல் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கு வழிவகை செய்யு வேண்டும்.

இதற்காக அந்த பெண்ணின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்." என அறிவுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி உதவியை நாடி 2.5 மணிநேரம், 8 கிலோமீட்டர் கால்நடையாக செல்ல வேண்டியிருந்த நிலையை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உடை கிழிந்த நிலையில் இரத்தம் சொட்ட சொட்ட அந்த சிறுமி நடந்தபோதும் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஊடக வெளிச்சத்துக்கு வந்த பிறகு அரசு சிறுமிக்கு உதவ முன்வந்தது. நிதியுதவி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.

ஆனால் இன்றுவரை அரசு அறிவித்த உதவிகள் எதுவும் அந்த சிறுமிக்கு கொடுக்கப்படவில்லை. உள்ளூர் தலைவர் வெறும் 1,500 ரூபாய் கொடுத்துள்ளார். இது அந்த குழந்தைக்கு துளியும் உதவாதது எனக் குறிப்பிடுகின்றனர்.

அந்த சிறுமி வாழும் கிராமத்தில் வெறும் 2 பம்ப்கள் மட்டுமே இருக்கிறது. அவர் ஒரு குடிசையில் வசித்து வருகிறார். அங்கிருந்து தினமும் தண்ணீர் எடுக்க நடந்து செல்லும் நிலையில் தான் வாழ்ந்துவருகிறார்.

"நடந்த வன்கொடுமையால் ஏற்பட்ட காயமும் மன அதிர்ச்சியும் பணத்தால் சரிகட்ட முடியாதவை. ஆனால் அந்த சிறுமிக்கும் குடும்பத்துக்கும் நடந்த சம்பவத்தில் இருந்து மீண்டு, மறுவாழ்வு நோக்கி நகர பணம் உதவியாக இருக்கும்" என கடிதத்தில் கூறியுள்ளார் மலிவால்.

உடனடியாக முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் தலையிட்டு நிதியுதவியாக சிறுமியின் குடும்பத்துக்கு 50 லட்சம் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் அரசு இதுநாள் வரை கண்டுகொள்ளாதது அதிர்ச்சியளிக்கிறது, அரசு உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டவர் மற்றும் குடும்பத்தினரின் மறுவாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உலகில் இருக்கும் மிகவும் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியல் இதோ!

Kallakurichi: தொடரும் உயிரிழப்புகள்; கண்ணீரில் கள்ளக்குறிச்சி - என்ன நடக்கிறது?

Lonar Lake: திசைகாட்டி வேலை செய்யாத மர்ம இடம்; இந்த ஏரியில் அப்படி என்ன தான் இருக்கிறது?

உங்கள் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் அதிகரிக்க வேண்டுமா? இதை ஃபாலோ செய்யுங்கள்!

மதிய உணவுக்குப் பிறகு ஏன் தூக்கம் வருகிறது தெரியுமா?