Karnataka HC Twitter
இந்தியா

விவாகரத்துக்குப் பின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Priyadharshini R

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்ற பழமொழி எல்லாம் மலையேறிவிட்டது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு என்றால் உடனடியாக விவாகரத்து பெற்றுக் கொள்கின்றனர்.

பெங்களூரைச் சேர்ந்த தம்பதி இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அதே நேரத்தில் அந்த பெண்ணுக்கு, ஜீவனாம்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

marriage

இந்த நிலையில், அந்த பெண் தனது திருமணத்தின் போது, கணவர் வீட்டாருக்கு சீதனமாக ரூ.9 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் ஆகியவை கொடுத்ததாகத் தெரிகிறது. இதனைப் பெண் வீட்டார்கள் திருப்பி கேட்டுள்ளனர்.

ஆனால் திருமணத்தின் போது கொடுத்த நகை, பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது என்றும், அது தங்களுக்குத் தான் சொந்தம் என்றும் அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாடியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண், பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

Law

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, விவாகரத்து பெற்ற பின்பு பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது சரியானது தான். அதே நேரத்தில் விவாகரத்து ஆன பின்பு திருமணத்தின் போது பெண் வீட்டார் கொடுத்த சீதனத்திற்குக் கணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாட முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

எனவே ஜீவனாம்சத்துடன், ரூ.9 லட்சம் ரொக்கம், நகைகள், பிற பொருட்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?