கழுத்தில் குத்திய 30 செ.மீ திரிசூலம் Twitter
இந்தியா

கழுத்தில் குத்திய 30 செ.மீ திரிசூலம்; சிகிச்சைக்காக 65 கி.மீ நடந்தே சென்ற நபர் - எங்கே?

Keerthanaa R

மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஸ்கர் என்ற நபர் கழுத்தில் குத்திய திரிசூலத்துடன் 65 கி.மீ சிகிச்சைக்காக நடந்தே சென்றுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்தனர்.

திரிசூலம்

கடந்த ஞாயிற்றுகிழமை அதிகாலை 3 மணியளவில், மேற்கு வங்கம், நாடியா பகுதியை சேர்ந்த பாஸ்கர் ராம் என்பவர் கல்கத்தாவிலுள்ள என் ஆர் எஸ் மருத்துவமனைக்கு வந்தார்.

இவரது கழுத்தில் 30 செ.மீ நீளமுள்ள திரிசூலம் ஒன்று இருந்தது. அவரது சொந்த ஊரான கல்யாணி என்ற இடத்தில் இருந்து கல்கத்தாவிற்கு, சுமார் 65 கி மீ நடந்தே வந்துள்ளார் பாஸ்கர்.

வீட்டில் நடந்த சிறு தகராறு காரணமாக இந்த திரிசூலத்தை எடுத்து குத்திக்கொண்டதாகவும், ஆனால், தனக்கு வலி எதுவும் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த திரிசூலம் அவர்களது வீட்டில் கிட்ட தட்ட 150 வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மருத்துவர் பிரணாபஷிஷ் பானர்ஜீ தலைமையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சில மணி நேரங்களில் அந்த திரிசூலம் அகற்றப்பட்டது.

பாஸ்கர் நலமுடன் இருப்பதாகவும், வேறு எந்த பாதிப்பும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?