ஒடிஷா: 2 மணி நேரத்துக்குள் 61,000 மின்னல்கள் - வானில் நடப்பது என்ன? Lightning / Representative
இந்தியா

ஒடிஷா: 2 மணி நேரத்துக்குள் 61,000 மின்னல்கள் - வானில் நடப்பது என்ன?

Antony Ajay R

ஒடிஷா மாநிலத்தில் செப்டம்பர் 2ம் தேதி பயங்கரமான வானியல் நிகழ்வு நடந்துள்ளது.

தலைநகர் புவனேஷ்வர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இடைவிடாத மின்னல் தாக்குதல் ஏற்பட்டது. இரண்டு மணிநேரத்தில் 61,000 மின்னல்கள் தாக்கியதாக பத்திரிகை செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதனால் அன்று பிற்பகலில் இருந்து இடைவிடாத இடி சத்தம் கேட்டதுடன், பெருமழையும் பொழிந்திருக்கிறது. ஒடிஷா மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில் மாலை 5:30 மணியளவில் மின்னல் தாக்கம் அதிகரித்ததாக கூறப்பட்டுள்ளது.

மொத்தமாக மேகத்திலிருந்து 36,597 மின்னல்களும் மேகத்தில் இருந்து தரைக்கு 25,753 மின்னல்களும் வெட்டியதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மின்னல் தாக்குதலில் 6 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநில சிறப்பு நிவாரண ஆணையர் இது குறித்துக் கூறும்போது 10 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

வெப்பநிலை அதிகமாக இருக்கும் தருணத்தில் வங்காள வரிகுடாவில் இருந்து குளிர்ந்த காற்று வருவதனால் மின்னல் வருவது அதிகரித்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் காலநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளனர்.

இன்றுவரை மின்னல், மழையின் தாக்கம் ஒடிஷாவில் அதிகரித்து வருகிறது. மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மரங்களில் அருகில் நடக்க வேண்டாம் என்றும் நீர் நிலைகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?