Roja
Roja Twitter
இந்தியா

ஆந்திரா : ரோஜாவிடம் திருமணம் செய்து வைக்கச் சொல்லிக் கேட்ட முதியவர்

Priyadharshini R

ஆந்திராவில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் அமலுக்கு வருகிறது, ஆனால் அவை மக்களுக்குச் சரிவரச் சென்றடைகிறதா என அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டு தீர்க்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

வீட்டுக்கே நலத்திட்டங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி புத்தூர் மண்டலம் ஒட்டிகுண்டல என்ற கிராமத்துக்குச் சென்ற சுற்றுலாத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா அங்கு ஒவ்வொரு வீடாக அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கின்றனவா என்று விசாரித்தார்.

ஜெகன்மோகன் ரெட்டி

அப்போது ஒரு வீட்டில் முதியவர் ஒருவரைப் பார்த்து, 'பென்சன் கிடைக்கிறதா?' என்று கேட்டார். அதற்கு, அந்த முதியவர் பென்சன் கிடைக்கிறது, எனக்கு மனைவி, குழந்தைகள் இல்லை. அதுதான் பிரச்சினை. எனக்கு உடனே திருமணம் செய்து வையுங்கள் என்று ரோஜாவிடம் கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ந்துபோன ரோஜா, குடும்பத்திற்கு அரசின் திட்டங்கள் வரவில்லை என்றால் அதற்குத் தீர்வு காணலாம். ஆனால் உங்களுக்கு நான் எப்படி திருமணம் செய்துவைக்க முடியும்? என்று சிரித்தபடி அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்தார். முதியவரின் வித்தியாசமான கோரிக்கை அங்கு இருந்த மற்றவர்களை சிரிக்கவைத்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?