condom Twitter
இந்தியா

ஆணுறை மூலம் போதை ஏற்றும் இளைஞர்கள் - என்ன நடக்கிறது இங்கே?

NewsSense Editorial Team

இளைஞர்கள் கையில் எடுக்கும் விஷயங்கள் தான் எப்போதும் டிரெண்டாகும். இன்று இளைஞர்களுக்கு டிடிஎஃப் வாசனைப் பிடித்திருந்தால் அவர்தான் இணைய உலகின் ராஜா. அமலா ஷாஜிக்கு இளைஞர்கள் உருகுகிறார்கள், லைக்ஸ்கள் குவிகின்றன, லட்சக் கணக்கான கமென்டுகள் பறக்கின்றன என்றால் அவர் தான் இளசுகளின் இதய ராணி.

இளைஞர்கள் வயதானவர்களை பூமர் அங்கில் பூமர் ஆண்டி என்றழைக்கிறார்கள் என்றால், வயதானவர்கள் அனைவரும் சட்டென பூமர் சோனில் தள்ளப்படுவார்கள்.

உணவு, உடை, கண்ணாடி, மொழி... என டிரெண்ட் எல்லாமே இளசுகளின் விரல் நுனியில்தான் இருக்கிறது. வித்தியாசமானவற்றை, புதியவற்றை கப்பென பிடித்துக் கொள்வது இளைஞர்கள் தான்.

அப்படி, சமீப காலமாக இளசுகள் பயன்படுத்தும் போதை வஸ்து முற்றிலும் மாறுபட்டதாக எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் துர்காபூர் நகரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆணுறைப் பயன்படுத்துவதில் அடிமையாகியுள்ளனர். ஆணுறை என்ற உடன் தவறாக உடல் உறவுக்கு அடிமையாகிவிட்டார்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டாம்.

Alcohol Addiction

இவர்கள் வாங்கும் ஸ்ட்ராபெர்ரி, வாழைப் பழம், சாக்லெட் ஃப்ளேவர் ஆணுறைகளை வெந்நீரில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஊறவைக்கிறார்கள். அப்படிச் செய்வதால் அந்த நீரில் ஏதோ ஒரு ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. அந்த நீரைக் குடித்தால் வழக்கமான மதுபானங்கள், போதை மாத்திரைகளில் கிடைக்கும் போதையை விட அதிக போதை கிடைப்பதாகவும், அது 10 - 12 மணி நேரத்துக்கு மனிதர்களைப் போதையில் ஆழ்த்துவதாகவும் இந்தியா டைம்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணுறைகளை வெந்நீரில் அதிக நேரம் முக்கி வைப்பதால் பெரிய ஆர்கானிக் மூலக்கூறுகள் பிரிந்து வந்து, ஆல்கஹால் காம்பவுண்டுகளை உருவாக்கும். இந்த ஆல்கஹால் காம்பவுண்டுகள் தான் இளைஞர்களுக்கு போதையைக் கொடுக்கிறது. இதற்குத் தான் அவர்கள் அடிமையாகிறார்கள் என துர்காபூர் ஆர் இ கல்லூரியைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியர் நூருல் ஹக் கூறுகிறார்.

ஆணுறைகளில் சில வாசனையான பொருட்கள் இருக்கின்றன. அதைப் பிரித்தெடுப்பதன் மூலம் ஆல்கஹால் உருவாக்கப்படுகிறது. இதே போன்ற வாசனையான பொருட்களை டென்ட்ரைட்ஸில் இருக்கும். எளிதில் கிடைக்கும் பொருட்களில் டென்ட்ரைட்ஸ் பட்டியலில் தற்போது ஆணுறையும் சேர்ந்து இருக்கிறது என துர்காபூர் துணை மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் திமன் மண்டல் பங்களா ஹன்ட் என்கிற பத்திரிகையிடம் கூறியுள்ளார்.

இந்த போதை நீர் இளைஞர்கள் மத்தியில் காட்டுத் தீ போலப் பரவி வருவதால், துர்காபூர், பிதான் நகர், பெனசிட்டி, முசிபரா, ஏ சோன், சி சோன்... போன்ற நகர் பகுதிகளில் ஆணுறைகளின் விற்பனை விண்ணைத் தொட்டுள்ளதாக நியூஸ் 18 தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 3 - 4 பாக்கெட் ஆணுறைகள் விற்பனையாகி வந்த நிலை மாறி தற்போது ஆணுறைகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருப்பதாக துர்கா பூரைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரர் ஒருவர் நியூஸ் 18 ஊடகத்திடம் கூறியுள்ளார்.

மேற்கு வங்க காவல்துறை இதுவரை ஆணுறை போதை வஸ்து விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால் ஹைதராபாத் காவல்துறையோ, இந்த விவகாரத்தில் எவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய முடியாது, காரணம் இது குறித்து எந்த தெளிவான வரையறைகளும் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இளைஞர்களின் எதிர்காலப் பாதையை மழுங்கடிக்கும் போதைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அரசு கவனத்தில் கொள்ளும் என நம்புவோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?