Election Commission Twitter
இந்தியா

Morning News Today: தேர்தல் ஆணையத்தின் திடீர் முடிவு கட்சிகளுக்கு ஆபத்து - என்ன நடக்கிறது?

NewsSense Editorial Team

தேர்தல் ஆணையத்தின் திடீர் முடிவு கட்சிகளுக்கு ஆபத்து!

இந்தியத் தேர்தல் ஆணையம், தனது நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத 2,000-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள்மீது நடவடிக்கை எடுக்க முடிவுசெய்திருக்கிறது. இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில், 15 கட்சிகள் மட்டுமே தேர்தல் செலவு அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய அறிக்கையைத் தாக்கல்செய்யாத 2,174 அரசியல் கட்சிகள்மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறைக்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.

மோடி

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மத்திய அரசுத் துறைகளின் சார்பில் பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதற்காக ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு வருகிறார். இந்த விழாவில், ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத்திட்டங்களை மோடி தொடங்கிவைத்துப் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பலத்த காவல்துறை பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மழை

தமிழகத்தில் 12 இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வந்தது. தற்போது தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகக் கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கிம் ஜாங் உன்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - அமெரிக்கா கண்டனம்!

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே வட கொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்திவருகிறது. கடந்த மார்ச் மாதம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதித்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருக்கிறது. ஐசிபிஎம் உள்பட 3 ஏவுகணைகளை ஒரே நாளில் சோதித்ததாக தென்கொரிய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. வட கொரியா தனது 7-வது அணுக்குண்டு சோதனைக்குத் தயாராகும் வகையில் அணுக்குண்டை வெடிக்க வைக்கும் கருவியைச் சோதனை செய்ததாகத் தென்கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுபோன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வடகொரியாவை அமெரிக்கா வலியுறுத்தியது.

ரஜத் படிதார்

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் குவாலிபையர் 2 -க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தகுதி பெற்றிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?