Dexter சீரிஸ் பார்த்து கொலை செய்த காதலன் Twitter
இந்தியா

டெல்லி : Dexter சீரிஸ் பார்த்து கொலை செய்த காதலன் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Priyadharshini R

டெல்லியில் இளம்பெண் ஒருவர் தன் காதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டி வீசியதையடுத்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மும்பையில் உள்ள மல்டி நேஷனல் கம்பெனியில் கால் சென்டரில் வேலை பார்த்து வந்த 26 வயதான ஷ்ரத்தாவுக்கும் அஃப்தாப் அமீன் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் லிவினில் இருந்து வந்துள்ளனர். திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

ஷ்ரத்தா - அஃப்தாப் அமீன்

கடந்த மே 18 ஆம் தேதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் அஃப்தாப். ஷ்ரத்தாவின் தந்தை மகளை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் அஃப்தாப் கைது செய்யப்பட்டார்.

அஃப்தாப் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், தனது முதல் வாக்குமூலத்தின் போது, ​​​​அஃப்தாப், 2022 மே மாதம் சண்டைக்குப் பிறகு ஷ்ரத்தா தன்னை விட்டுச் சென்றுவிட்டதாகவும், அதன்பிறகு, அவர் இருக்கும் இடம் தனக்குத் தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.

அதன் பின்னர் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.

ஷ்ரத்தாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்த அஃப்தாப் போலீசாரிடம் மாட்டிக்கொள்வதை தடுக்க அவரது சடலத்தை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார்.

அதனை வைக்க 300 லிட்டர் கொள்ளளவு ஃப்ரிட்ஜ் வாங்கியுள்ளார். சடலத்தை வெட்டி ஃப்ரிட்ஜுக்குள் வைத்து, அடுத்த 18 நாட்களில் அதனை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்துள்ளார். தினமும் காலையில் எழுந்ததும் கொலை செய்த காதலியின் முகத்தை பார்த்துள்ளார். அதே வீட்டில் 18 நாட்கள் தங்கி இவ்வாறு செய்துள்ளார்.

வீட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்துள்ளார்.

அமெரிக்க சைக்கோ கில்லர் தொடரான ‘டெக்ஸ்டர்’-ஐ பார்த்து தான் இவ்வாறு கொலை செய்த காதலியை துண்டுத்துண்டாக வெட்டி வீசியதாக விசாரணையில் அஃப்தாப் கூறியிருக்கிறார். இதற்காக கூகுள் செய்து பார்த்த போது இந்த சீரிஸ் பார்த்திருக்கிறார் அஃப்தாப்.

டெக்ஸ்டரும் இதே போன்று தான் கொலை செய்யும் ஆட்களை துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் கவரில் போட்டு கால்வாயில் தூக்கி வீசுவார். அதேபோல் செய்தால் கொலையில் இருந்து தப்பிவிடலாம் என நினைத்து அஃப்தாப் இவ்வாறு செய்ததாக கூறியிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?