murder Twitter
இந்தியா

ஆண் குழந்தை வேண்டும் : மனைவியின் வாயில் ஆசிட் ஊற்றிய கணவர் - எங்கே ?

Priyadharshini R

அசாம் கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பைரப்நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷகீல் அகமது. இவரது மனைவி சும்னா பேகம். இவர் பெண் குழந்தை பெற்றெடுத்ததை அடுத்து, சும்னாவை கணவர் வீட்டில் உள்ளவர்கள் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று சும்னாவின் கணவர் மற்றும் மாமியார் சேர்ந்து வலுக்கட்டாயமாக அவரை குடிக்க வைத்துள்ளனர்.

இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சும்னா பேகம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

Acid

பெண் வீட்டார் கணவர் குடும்பத்தின் மீது புகார் அளித்தனர். பெண் குழந்தை பெற்றதற்காகக் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் பேகம் மீது ஆத்திரத்திலிருந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ஆண் குழந்தை பெற்றெடுக்காததற்காக ஆசிட் குடிக்க வைத்து அவரை கொலை செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றி தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. மனைவியை, கணவர் மற்றும் உறவினர்களே ஒன்று சேர்ந்து வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?