Dead Twitter
இந்தியா

இறந்த மூதாட்டி மீண்டும் வந்து தேநீர் அருந்திவிட்டு உயிரிழந்த அதிசயம் - எங்கே?

Keerthanaa R

இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி மீண்டும் எழுந்துவந்து தேநீர் அருந்திவிட்டு உயிரைவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஃபிரோசாபாத் என்ற இடத்தை சேர்ந்த 81 வயது மூதாட்டி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவரது இதயம் மற்றும் மூளை செயல்பாடுகள் நின்றது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவரீதியாக இவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால், குடும்பத்தினர் அந்த மூதாட்டியின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

மூதாட்டியின் உடலை தகனம் செய்ய கொண்டுசெல்லும் வழியில், அவர் திடீரென எழுந்து உட்கார்ந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் அவர் உயிருடன் இருப்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

மீண்டும் வீட்டிற்கு திரும்பிய அந்த மூதாட்டி, தேநீர் தயாரித்து அருந்தியுள்ளார். மறுநாள் நிஜமாகவே அவரது உயிர் பிரிந்தது. இறுதிச்சடங்குகளை முடித்த அவரது மகன், தனது தாய்க்கு தேநீர் மிகவும் பிடித்த பானம் எனக் குறிப்பிட்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?