Death Twitter
இந்தியா

பள்ளி ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 10ம் வகுப்பு மாணவர்- வீடியோ

Antony Ajay R

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தன்னைத் திட்டியதற்காக ஆசிரியர் மீது கோபப்பட்ட மாணவன், நாட்டுத் துப்பாக்கி ஒன்றால் மூன்று முறை அவரை சுட்டுவிட்டு துப்பாக்கியுடன் ஓட முயற்சித்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக உத்திரபிரதேசம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சுடப்பட்ட ஆசிரியர் பலத்த காயமடைந்துள்ளார். அவரது முக்கியமான உள்ளுருப்புகள் பாதிக்கப்படாததால் தற்போது உயிருக்கு ஆபத்து இல்லை எனக் கூறியுள்ளனர். அவர் மேல் சிகிச்சைக்காக லக்னோ அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த மொத்த நிகழ்வும் சிசிடிவியில் பிடிப்பட்டிருக்கிறது.

இந்த காட்சியில் துப்பாக்கியுடன் மாணவர் ஆசிரியரை துரத்துவம், இருவருக்கும் சண்டை நடப்பது தெரிகிறது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பின்னர் அந்த மாணவரிடம் இருந்து ஆசிரியரைக் காப்பாற்றினர்.

தான் பள்ளியில் கண்டித்ததால் அந்த மாணவர் கோபமாக இருப்பது கூட தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் லக்னோவில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?