e-scooter battery explodes Twitter
இந்தியா

ஆந்திரா : மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி - 3 பேர் பலத்த காயம்

Priyadharshini R

எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் எலெக்ட்ரிக் வாகனங்களை மாற்று வழிகளாக எண்ணி, மக்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் சமீபகாலமாக மின்சார ஸ்கூட்டரில் பேட்டரி வெடிக்கும் பல சம்பவங்கள் நடந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அதனைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

e-scooter

கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சார ஸ்கூட்டரில் தீப்பிடித்து 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

தற்போது ஆந்திராவின் விஜயவாடாவில் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பலத்த காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேட்டரி படுக்கையறையில் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு இருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்கள் வாங்கவே அச்சப்படுகின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?