Wedding  Pexels
இந்தியா

8 வருட குடும்ப வாழ்க்கையில் விரிசல்: கணவரை ’பெண்’ என கண்டுபிடித்த மனைவி - எப்படி?

Keerthanaa R

திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தன் கணவன் ஒரு பெண் என மனைவி கண்டறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், இந்தோனேசியாவில் ஒரு பெண்  திருமணம் முடிந்த சில நாட்களில் அவரது கணவர் பெண் எனக் கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது. அதே போல இந்தியாவிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Indian wedding (rep)

குஜராத் வடோடராவை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தன் கணவர் உண்மையில் ஒரு பெண் என குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என தன்னை மிரட்டி, துன்புறுத்தி வருவதாகவும் புகாரில் அந்த பெண் குறிப்பிட்டிருந்தார்

புகார்தாரர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் மேட்ரிமோனி மூலமாக டாக்டர் விராஜ் என்பவரைச் சந்தித்துள்ளார். ஒரு வருடப் பழக்கத்திற்குப் பிறகு இருவருக்கும் 2014ல் திருமணம் நடந்துள்ளது. புகார்தாரருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, 14 வயதில் ஒரு மகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. கணவன் இறந்த பிறகு, மறுமணம் செய்துகொள்ள முடிவெடுத்தப் போது தான் விராஜ் என்பவரை சந்தித்துள்ளார்.

Wedding

திருமணம் ஆகி பல நாட்கள் ஆகியும் கணவர் தன்னுடன் உடல் உறவு வைத்துகொள்ளாமல் இருந்ததாகவும், எப்போதும் எதாவது ஒரு காரணம் சொல்லிவந்ததாகவும் அந்த பெண் கூறினார். மேலும், அவர்கள் ஹனிமூனுக்காக காஷ்மீர் சென்றிருந்தபோது, தான் ஒரு பெரிய விபத்தில் சிக்கியதாகவும், அதனால் தன்னால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது என தட்டிக் கழித்தாகவும் அவர் கூறினார்.

சில நாட்களில் இந்த பிரச்னை சரியாகிவிடும் எனக் கூறிய தன் கணவர், உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்காக கொல்கத்தா சென்றுள்ளார் விராஜ். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து திரும்பிய பிறகு தான் அந்த பெண்ணுக்கு பிரச்னைகள் துவங்கியுள்ளன. 

கல்கத்தாவிற்கு அவர் சென்றது பாலியல் மறுசீரமைப்பு செய்துகொள்ள என்பது பின்னர் தான் தெரியவந்துள்ளது. வீடு திரும்பிய கணவர், தான்  ஒரு பெண் என்ற உண்மையை தெரிவித்துள்ளார். தான் கல்கத்தாவிற்கு சென்றதும் பாலியல் மறுசீரமைப்பு செய்துகொள்ள என தெரிவித்த விராஜ், இந்த உண்மையை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டி, துன்புறுத்தி வந்துள்ளார். 

ஆனால் அவரிடம் இருந்து தப்பித்து கோத்ரி காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட விராஜ்  டெல்லியிலிருந்து வதோதராவுக்கு அழைத்து வரப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.கே.குர்ஜார் கூறினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?