Ashwin BCCI
ஸ்போர்ட்ஸ்

IPL 2022: சென்னையை சாத்திய அஷ்வின்; கடைசி போட்டியிலும் கிட்னியை மட்டும் வென்ற CSK

Antony Ajay R


ஐபிஎல் 2022 சீசன் லீக் சுற்றின் தனது கடைசி ஆட்டத்திலும் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஆட்டத்தில் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அதுமட்டுமல்ல பாயின்டஸ் டேபிளில் கடைசி நேரத்தில் நல்ல ரன்ரேட்டுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது.

இதன் மூலம் குவாலிபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி. அந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடும்.

இரண்டாவது ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்தது. அதன் பிறகு அதிரடியை துவங்கினார் மொயின் அலி. குறிப்பாக அஷ்வின் வீசிய ஐந்தாவது ஓவரில் இரண்டு பௌண்டரி ஒரு சிக்ஸர் வைத்து 16. ரன்கள் குவித்தார்.

பவர்பிளேவின் இறுதி ஓவரை வீச டிரென்ட் போல்ட் வந்தார். அவரது பந்தை சின்னாபின்னமாக்கினார் மொயின் அலி. ஆம் ஒரு பந்தை கூட விட்டுவைக்கவில்லை. ஒரு சிக்ஸர் மற்றும் ஐந்து பௌண்டரிகள் என 26 ரன்கள் குவித்தார்.

CSK

பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது சென்னை அணி. அசால்ட்டாக 200 ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கும் போது ட்விஸ்ட் துவங்கியது.

எட்டாவது ஓவரில் கான்வாய் மற்றும் ஒன்பதாவது ஓவரில் ஜெகதீசன் அவுட் ஆயினர்.

எனினும் 10 ஓவர்கள் முடிவில் 94 ரன்கள் எடுத்திருந்தது சென்னை அணி. 11வது ஓவரில் ராயுடு அவுட் ஆக தோனி களமிறங்கினார்.

அவர் மெதுவாக விளையாட, ரன் ரேட் வேகமாக சரிந்தது. எட்டாவது ஓவரில் இருந்து 14வது ஓவரை வரை ஒரு பௌண்டரி கூட சென்னை சார்பில் யாரும் அடிக்கவில்லை.

15வது ஓவரில் ஒரு பௌண்டரி அடித்தார் தோனி. 18வது ஓவரில் ஒரு சிக்ஸர் வைத்தார், 19வது ஓவரில் வீழ்ந்தார். அவர் 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

21 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்த மொயின் அலி, அடுத்த 36 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அதாவது 57 பந்துகளில் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் அவுட் ஆனார்.

20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்தது சென்னை.

ராஜஸ்தான் சேஸிங்கை தொடங்கியபோது முதல் இரண்டு பந்துகளை பௌண்டரிக்கு விரட்டியது. ஆனால் இரண்டாவது ஓவரிலேயயே பட்லரை இழந்தது. எனினும் ஜெய்ஷ்வால் நேர்த்தியாக ஆடினார்.

RR

மூன்று விக்கெட்டுகளை இழந்தபிறகு ரவிச்சந்திரன் அஷ்வினை பேட்டிங்க்கு அனுப்பியது. அவர் ஜெய்ஷ்வால் அவுட் ஆனாலும் கூட பொறுப்பாக விளையாடி அணியை கரை சேர்த்தார். 23 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் விளாசி 40 ரன்கள் எடுத்தார் அஷ்வின்.

இதனால் இரண்டு பந்துகள் மீதம் வைத்து வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ். அஷ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார்.

14 போட்டிகளில் விளையாடிய சென்னை நேற்றைய தினம் தனது 10வது தோல்வியைப் பதிவு செய்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?