பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 11ஆம் வகுப்பு மாணவி canva
தமிழ்நாடு

பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 11ஆம் வகுப்பு மாணவி - என்ன நடந்தது?

Keerthanaa R

11ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்து, தொப்புள் கொடியை பேனாவை வைத்து துண்டித்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சிதம்பரம், கடலூர் பகுதியில் அரசு பள்ளி கழிவறை அருகே உள்ள புதரில் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளி நிர்வாகம் புவனகிரி காவல் துறைக்கு தகவல் அளித்தது. தகவலின் பேரில் பள்ளிக்கு விரைந்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி, விசாரணைகள் மேற்கொண்டனர். 

விசாரணையில், அதே பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அந்த குழந்தையைப் பெற்றெடுத்ததை ஒப்புக்கொண்டார். வகுப்பில் இருக்கும்போது தனக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், அதனால் கழிவறைக்கு சென்று தானே  குழந்தையை ஈன்றதாகவும் மாணவி தெரிவித்தார்.

குழந்தை பிறந்த பிறகு, தொப்புள் கொடியை பேனாவை வைத்து துண்டித்துள்ளார் மாணவி. குழந்தையை அருகே இருந்த புதரில் வீசி விட்டு, எதுவும் நடக்காதது போல வகுப்பறைக்கு திரும்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் தான் கர்ப்பமாக இருந்த விஷயம் தன் பெற்றொருக்கு தெரியாது என்றும் மாணவி கூறியுள்ளார். முறையான மருத்துவ உதவி இல்லாமல் மாணவி தானே பிரசவம் பார்த்துக்கொண்டதால் குழந்தை இறந்திருக்கலாம் என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. 

இந்நிலையில், மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது யார் என்ற விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது. மாணவியின் கிராமத்தை சேர்ந்தவர்கள் , குடும்பத்தார் சிலரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைத்தனர்.

தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவனும், பாதிக்கப்பட்ட மாணவியும் காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் சுற்றுவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?