Laundry  Twitter
தமிழ்நாடு

வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் போது தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

Priyadharshini R

விடுமுறை என்றாலே உடனே சிலரின் நினைவிற்கு வருவதும் இந்த சலவை தான். காரணம் வாரம் முழுவதும் பயன்படுத்திய உடைகளை வார இறுதியில் தான் சலவை செய்வார்கள்.

விரும்பவே இல்லையென்றாலும் நீங்கள் சலவை செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள். நம் ஆடையின் சுத்தம் ஆரோக்கியத்தின் ஒரு பங்காக கருதப்படுகிறது.

சலவை செய்யும் போது நீங்கள் தவிர்க்கக்கூடிய 5 விஷயங்கள் இதோ!

1. உங்கள் வாஷிங் மெஷினை சுத்தம் செய்யாமல் இருப்பது

வாரத்திற்கு ஒரு முறை மட்டும் துணி துவைத்துவிட்டு பின்னர் வாஷிங் மெஷினை திரும்பி கூட பார்க்கமாட்டோம்.

மீண்டும் வார இறுதியில் உன்னை சந்திக்கிறேன் ”வரேண்டா சின்னசாமி” என்று வாஷிங் மெஷினுக்கு பாய் சொல்லி விடுவோம், ஒரு வாரத்திற்கு பின் அதனை மீண்டும் பயன்படுத்துவோம். ஆனால் துணியை துவைத்து எடுக்கும் மெஷின் சுத்தமாக இருக்கிறதா? என்று எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா?

சலவை இயந்திரம் சுயமாக சுத்தம் செய்தாலும் அது எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும், இல்லையா?

2. சலவை சானிடைசர் அவசியம்

துணிகளை சுத்தம் செய்வது என்பது வேறு, கிருமி நீக்கம் செய்வது என்பது வேறு.

சுத்தம் செய்வது மேற்பரப்பில் உள்ள அனைத்து அழுக்குகளையும் அகற்றுவது. கிருமி நீக்கம் செய்வதன் மூலம் ஆடைகளில் உள்ள கிருமிகள் நீங்குகிறது.

இன்றைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு சலவை சானிடைசர் வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் துணிகளை கிருமிகளிலிருந்து பாதுகாக்க சோப்புக்குப் பிறகு சலவை சானிடைசர் பயன்படுத்தி கிருமிகளை அகற்றிக்கொள்ளலாம்.

உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆகியவை, ஆடைகளில் இருக்கும் சுவாச துளிகளுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்பு மூலம் வைரஸ்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதாக கூறியுள்ளது.

3. சலவைப் பொடி பயன்படுத்தும் முறை

சிலர் சிக்கனம் என்ற பெயரில் சலவைபொடியை தண்ணீருக்கும் பத்தாமல், துணிக்கும் போதாமல் பயன்படுத்துவார்கள்.

அதன் பின்னர் மெஷின் சரியாக துணியை சலவை செய்யவில்லை என்று கூறுவார்கள். சிலரோ அதிகமாக பொடியை அள்ளி கொட்டுவார்கள்.

சரியான அளவு இன்னும் பலருக்குத் தெரியவில்லை. தண்ணீர் அளவு சலவைப்பொடி பாக்கெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த அளவை மக்கள் பயன்படுத்தலாம்.

4. ஈரமான ஆடைகளை இயந்திரத்தில் நீண்ட நேரம் விட்டு வைப்பது

நாம் சில நேரங்களில் சலவை இயந்திரத்தில் உள்ள துணிகளை மறந்து விடுகிறோம். அவற்றை நீண்ட நேரம் விட்டுவிடுவது ஆரோக்கியமற்றது மட்டுமல்ல, துணி துவைத்ததற்கான பலனையும் அவை இழக்கின்றன.

5. துணிகளை வரிசைப்படுத்தாமல் இருப்பது

பொதுவாக இந்த வாஷிங் மெஷினில் வெள்ளை ஆடையுடன் மற்ற கலர் ஆடைகளை சேர்த்து நம்மில் பலர் போட்டிருப்போம். அவ்வாறு செய்வதால் பல ஆடைகள் பயன்படுத்த முடியாமல் போயிருக்கும்.

இதனை மறந்து செய்வதால் தடுக்க முடியாது, இருந்தபோதினும் துணிகளை தனிதனியாக பிரித்து வைத்தபின்னர் மெஷினில் போடலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?