Tower Canva
தமிழ்நாடு

தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் காணாமல் போனதா?

Antony Ajay R

கொரோனா காலத்தில் நமது நடைமுறை வாழ்வு பாதிக்கப்பட்டு பல முரணான நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த முரண் குற்றச் செயல்களிலும் தொடர, வித்தியாசமான திருட்டு சம்பவம் நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் வடிவேலு, "வட்ட கிணறு சார் வத்தாத கிணறு.. என் கிணத்தக் காணோம்" என காவல்துறையில் புகார் கொடுப்பது போல செல்போன் டவர் நிறுவனங்கள் தங்களது 600 டவர்களை காணவில்லை எனக் கூறியுள்ளன.

இந்த டவர்கள் செயல்படாமல் இருந்தவை எனக் கூறப்படுகிறது. செயல்படாத டவர்கள் மட்டுமே காணாமல் போயிருப்பதுடன் அவை அனைத்தும் கொரோனா காலத்திலே காணமல் போயிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த செல்போன் டவர் ஒன்றை உருவாக்க 25 முதல் 40 லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கின்றன சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்.

முன்னதாக மதுரை மாவட்டம் கூடல் புதூரில் வோடஃபோன் டவர்கள் காணமல் போனது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்துக்கு தொடர்ந்து சிக்னல் தொடர்பான புகார்கள் வந்த பின்னர் டவர்களை சரிபார்க்க நிறுவனம் முடிவு செய்தது. அப்போது தான் டவர் காணமல் போன செய்தி தெரிந்திருக்கிறது. இந்த டவர் 28.8 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவக்கப்பட்டதாம்.

முன்னதாக பீகரில் 60 அடி பாலம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?