இந்திராணி, சையத் அலி, மாலதி Twitter
தமிழ்நாடு

சிறுமியின் கருமுட்டை விவகாரம் : தமிழகம் முழுவதும் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு

Priyadharshini R

ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமியின் கருமுட்டைகளை அவரது தாயே பணத்திற்காகத் தனியார் மருத்துவமனைகளில் பலமுறை விற்றுள்ள சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் தாய் இந்திராணி என்ற சுமையா, அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் புரோக்கர் மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருமுட்டை விவகாரம்- விசாரணை

13 வயது சிறுமியை கருமுட்டையை விற்பனை செய்ய ஈரோடு, சேலம், ஓசூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் ஆந்திர, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.

இதுவரை சிறுமியிடமிருந்து எட்டுமுறை கருமுட்டைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

ஒவ்வொரு முறை சிறுமியின் கருமுட்டை கொடுக்கப்பட்டபோதும், அவருக்குக் கொடுக்கப்பட்ட ரூ.20,000 பணத்தை இந்திராணி, சையத் அலி எடுத்துக்கொண்டதாகவும், மாலதி ரூ.5,000 கமிஷன் பெற்றுக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

கருமுட்டை கொடுக்கும் நபர் குறைந்தபட்சம் 23 வயதானவராக இருக்கவேண்டும்.

ஒரு பெண் தனது ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே கருமுட்டை விற்கலாம்

இந்திராணி, சிறுமியின் 13 வயதிலிருந்தே கருமுட்டையை விற்பனை செய்துவந்திருக்கிறார். அதற்காகவே சிறுமியின் வயதை ஆதார் அட்டையில் திருத்தம் செய்திருக்கிறார்.

சிறுமி வாக்குமூலம்

சிறுமி மனநல ஆலோசனை வழங்கப்பட்டு அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். அவர்கொடுத்த வாக்குமூலத்தின் படி,

சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தையான பெயிண்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமியிடமிருந்து எட்டுமுறை கருமுட்டைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

investigation

நடவடிக்கை

சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில், ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை உயர்மட்டக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் இந்த சிறுமி ஒருவர்தான் பாதிக்கப்பட்டுள்ளாரா?

கரு முட்டைதானம் சட்டப்படியும், மருத்துவ சட்ட வழிமுறைகளின் படியும் நடைபெறுகிறதா?

பணத்திற்காக சிறுமிகளின் கருவறைகள் மீண்டும் மீண்டும் காயப்படுத்தப்படுகிறதா? என்ற பல்வேறு கோணத்தில் ஈரோடு மாவட்ட காவல்துறையும், மருத்துவ அதிகாரிகளும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?