அரசின் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?  Twitter
தமிழ்நாடு

அரசின் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

Priyadharshini R

சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வாக்குறுதியாக திமுக கூறியிருந்தது.

இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 1.63 கோடி பேர் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.

அதிலிருந்து 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கவுள்ளதாக அரசு அறிவித்தது.

அதன்படி இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கிவைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தநிலையில் அவர்களின் வங்கி கணக்கிற்கு உதவிதொகை செலுத்தப்பட்டு வருகிறது.

ரூ.1,000 உரிமைத் தொகையைப் பெற தகுதிகள் என்னென்ன?

  • குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனப் பெயரிடப்பட்ட பெண்

  • ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அவரது மனைவி

  • திருமணமாகாத பெண், திருநங்கை தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவியாகக் கருதப்படுவர்.

  • ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் ஒருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது?

  • ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் இருக்கும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு உரிமைத் தொகை கிடையாது.

  • ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கும் அதிகமான புன்செய் நிலம் வைத்திருப்போர்.

  • மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்

  • ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் பெறுவோர்

  • சமூகப் பாதுகாப்பு திட்ட ஓய்வூதியமும், அரசிடமிருந்து ஓய்வூதியமும் பெறும் குடும்பங்கள்

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் செய்ய வேண்டியதென்ன?

  • எதற்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்ற தகவலை அறிய பயனாளிகள் தரப்பு விளக்கத்தை, மேல்முறையீடாக தாக்கல் செய்யலாம்.

  • குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற நாட்களில் இருந்து 30 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பெறுவதற்கு

  • தனி நபர்கள் மூலம் பெறும் புகார்களுக்கு வருவாய் கோட்டாட்சியரே விசாரணை அலுவலராகச் செயல்படுவார்.

  • நேரில் செல்ல இயலாதவர்கள் இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம். அதற்கும் 30 நாட்கள்தான் அவகாசம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?