பேச்சியம்மாள்
பேச்சியம்மாள் Twitter
தமிழ்நாடு

பெண் என்ற அடையாளத்தை மறைத்து 30 வருடங்கள் ஆணாக வாழ்ந்த பேச்சியம்மாள் - போராட்ட கதை

Antony Ajay R

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகில் காட்டிநாயக்கம் பட்டியில் வசிப்பவர் பேச்சியம்மாள். மக்கள் இவரை முத்து என அடையாளம் காண்கிறார். பெண்ணான இவரை ஆண் என எண்ணி முத்து மாஸ்டர், அண்ணாச்சி என்றும் அழைக்கின்றனர். இதன் பின்னிருக்கும் சுவாரஸ்ய கதையைத் தெரிந்துகொள்ளலாம்.

தற்போது 57 வயதாகும் பேச்சியம்மாளுக்கு 20 வயதில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணமான 15 நாட்களுக்குள் அவரது கணவர் மரணமடைந்திருக்கிறார். ஆனால் அதற்குள் பேச்சியம்மாளின் வயிற்றில் கரு உண்டாகியிருந்தது.

பெண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த பேச்சியம்மாள் அதனை வளர்த்தெடுப்பதற்கே வாழ்வை அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்வதையும் தவிர்த்துவிட்டார். ஆனால் கணவனை இழந்த பெண்ணை இந்த சமூகம் நிம்மதியாக இருக்க விடுமா? பெண்கள் சுதந்திரமாக வேலை செய்து தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுவது இந்த சமூகத்தில் சுலபமானதா?

முத்து - பேச்சியம்மாள்

தன் பிள்ளைக்காக ஆண் வேடம் தரித்து வேலைகளை கவனிக்க தொடங்கியுள்ளார் பேச்சியம்மாள். முடியை குறைவாக வெட்டி தளர்வான சட்டை அணிந்து கொண்டு தன் பெயரையும் முத்து என மாற்றிக்கொண்டார்.

ஆண்களுக்கு எவ்விதத்திலும் குறைந்து விடாமல் ஹோட்டல், டீக்கடை, பெயின்டிங் உள்பட பல கடினமான வேலைகளை செய்து தன் மகளை காப்பாற்றியிருக்கிறார். உடன் பணிபுரிந்த அனைவரும் இவரை முத்து மாஸ்டர் என்றே அழைத்திருக்கின்றனர்.

பொதுக் கழிப்பிடம் முதல் பஸ் பயணம் வரை அனைத்தையும் ஆண்களின் வரிசையில் நின்றே செய்திருக்கிறார். வாக்காளர் அடையாள அட்டை முதல் ஆதார் அட்டை வரை அனைத்தையும் முத்து என்ற பெயரில் ஆண் அடையாளத்துடனே பெற்றிருக்கிறார்.

தனது பெண்மையை மறைத்து யாருக்கும் சந்தேகம் வராதபடி 30 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த முத்து தற்போது வாழ்வாதாரம் எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிறார்.

பாலியல் ரீதியிலான சீண்டல்களிலிருந்து விடுபட ஆணாக மாறிய பேச்சியம்மாள் வாழ்நாளில் மிகுந்த சிரமங்களை அனுபவித்து அவர் நினைத்தபடி அவரது பெண்ணை படிக்க வைத்து மணம் முடித்துக் கொடுத்துவிட்டார்.

வயது மூப்பால் தற்போது முன்போல் வேலை செய்ய முடியாத முத்து தன் அடையாளத்தைக் களைத்து பேச்சியம்மாளாக மாறிவிட்டார். ஆனால் அரசு அடையாளப்படி அவர் ஆண் தான். அதனால் முதியோர் உதவித்தொகை பெற முடியாமல் தவித்து வருகிறார் முத்து. அவரது வறுமையையும் வயதையும் கருத்தில் கொண்டு அரசு அவருக்கு உதவ முன்வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

பெண்ணாகப் பிறந்த ஒருவர் அந்த அடையாளத்துடன் வாழ்வதே முடியாத காரியம் எனும் நிலை சமூகத்தின் இழிவான நிலையை எடுத்துக்காட்டுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?