leopard Twitter
தமிழ்நாடு

நீலகிரி : பூனை என நினைத்து சிறுத்தை குட்டியைத் தூக்கி வந்த தொழிலாளர்கள்

Priyadharshini R

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்திற்குத் தொழிலாளர்கள் வழக்கம் போல பணிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே சத்தம் கேட்பதை அறித்த தொழிலாளர்கள், அங்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தை குட்டி ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பூனைக் குட்டி என நினைத்த தொழிலாளர்கள் கையில் தூக்கி எடுத்து வந்துள்ளனர்.

பின்னர் அது பூனைக் குட்டி இல்லை சிறுத்தை குட்டி என அறிந்தததையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு ஏற்கெனவே அது கிடந்த அதே பகுதியில் விட்டுள்ளனர்.

அதற்கான காரணத்தையும் வனத்துறையினர் கூறியுள்ளனர். அதில் , தாய் சிறுத்தை உணவு தேடுவதற்காகக் குட்டியைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுச் சென்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அப்பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நிச்சயம் தாய் சிறுத்தை குட்டியை எடுத்துச் செல்லும் என நம்புகிறோம் என்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?