டெல்லி மெட்ரோவில் பிகினியுடன் பயணம் செய்த பெண் : வைரலான வீடியோ - என்ன சொல்கிறார் அவர்? Twitter
Viral Corner

மெட்ரோவில் பிகினியுடன் பயணம் செய்த பெண் : வைரலான வீடியோ - என்ன சொல்கிறார் அவர்?

Antony Ajay R

டெல்லி மெட்ரோவில் பிகினியுடன் பயணம் செய்த பெண் ட்விட்டரில் பரவலாக பேசப்பட்டுவருகிறார்.

டெல்லி மெட்ரோ பெண் என அழைக்கப்படும் அவர் அவரது ஆடைத் தேர்வுக்காக பலரால் விமர்சிக்கப்பட்டார்.

சிலர் அந்த பெண் யார் என அறிந்துகொள்ள முயன்றனர். தான் ஒரு மாதத்துக்கும் மேலாக இதேப்போல உடையணிந்து தான் வருவதாக அந்த பெண் கூறியுள்ளார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், அவரது உடைத் தேர்வு குறித்து பேசியுள்ளார்.

ரிதம் சனானா என்பது தான் அவரது பெயர். இந்தியா டுடே தளம் அவரை சமீபத்தில் நேர்காணல் செய்திருந்தது.

சடாரென சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது குறித்தும், அவருக்கு வரும் மோசமான கமண்ட்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார் ரிதம்.

"நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது என்னுடைய சுதந்திரம். நான் ஃபேமஸாக வேண்டும் என்று எதுவும் செய்யவில்லை. மக்கள் என்ன கூறினாலும் நான் அவற்றைப் பொருட்படுத்தப்போவதில்லை" என அவர் கூரியுள்ளார்.

இவர் குறைவான ஆடைகள் அணிவது பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவேத் செய்வதை நகலெடுப்பது போல இருப்பதாக பலரும் கூறிவந்த நிலையில், அதனை மறுத்துள்ளார் ரிதம்.

"சமீபத்தில் என் நண்பர் யார் உர்ஃபி எனக் காட்டும் வரையில் எனக்கு அவரைத் தெரியாது. இப்போது தெரிந்துகொண்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "நான் வழக்கமாகவே இப்படிதான் உடை அணிந்து பயணம் செய்கிறேன். நானும் ஒரு பழமைவாத குடும்பத்தில் இருந்து தான் வருகிறேன். என் குடும்பத்தினர் நான் விரும்பியதைச் செய்ய அனுமதித்தது இல்லை. ஆனால் ஒரு நாள் இது என் வாழ்க்கை என் விருப்பப்படிதான் வாழ வேண்டும் என நான் முடிவு செய்தேன்.

நான் மாதக்கணக்கில் இப்படி பயணம் செய்கிறேன். டெல்லி பிங்க் லைனில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மற்ற பாதைகளில் நான் வழக்கம்போல பயணிக்கிறேன்." எனவும் துணிச்சலாக பேசியுள்ளார் அந்த 19வயது பெண்.

மேலும் அவரது குடும்பத்தினர் அவரது ஆடைத் தேர்வு குறித்து மகிழ்ச்சியாக இல்லை என்றும், பக்கத்துவீட்டினர் சில முறை அவரை மிரட்டியதாகவும் பேசியுள்ளார்.

"மெட்ரோவுக்குள் வீடியோ எடுப்பது தவறு என்ற தங்களின் சொந்த விதியை DMRC இப்போது மறந்துவிட்டது முரணாக இருக்கிறது. எனது உடையில் அவர்களுக்குப் பிரச்சனை என்றால், அதைப் படமெடுத்தவர்களிடமும் பிரச்சனை இருக்க வேண்டும்." என தன்னை அனுமதியின்றி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது குறித்துப் பேசியுள்ளார் ரிதம்.

அவரது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியிருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?