கருவில் இருக்கும் குழந்தைகள் சுவை அறியுமா? ஆராய்ச்சி சொல்வதென்ன? canva
உலகம்

கீரைக்கு நோ, கேரட் ஓகே: கருவில் இருக்கும் குழந்தைகள் சுவை அறியுமா? அறிவியல் சொல்வதென்ன?

Keerthanaa R

இங்கிலாந்தில் டர்ஹம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கர்ப்பிணி பெண்களை வைத்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். கருவில் இருக்கும்போதே குழந்தைகளுக்கு முகரும் உணர்வு எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்துகொள்ளும் முயற்சி அது.

குறிப்பிட்ட சுவை மற்றும் வாசனைகளுக்கு குறிப்பிட்டவாறு குழந்தைகளின் முகபாவம் மாறும் புகைப்படங்கள் இணையத்தை கவர்ந்து வருகின்றன. 

100 கர்ப்பிணி பெண்களை வைத்து 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன.  அந்த 100 பேரில் ஒரு குழுவை சேர்ந்த 35 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கீரையும் இன்னொரு குழுவை சேர்ந்த 35 பேருக்கு கேரட்டும் கொடுக்கப்பட்டன

கீரையை உட்கொண்ட பெண்களின் கருவிலிருந்த குழந்தைகள் அந்த சுவைக்கு, வாசனைக்கு 'முகம் சுளித்ததாக' கண்டறியப்பட்டது. 

கிட்டத்தட்ட அனைத்து கருக்களும் கேரட்டின் சுவை/வாசனைக்கு ஒரு புன்னகையுடன் எதிர்வினையாற்றுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இதற்கு முன்னர் நடந்த பல ஆராய்ச்சிகளில் குழந்தைகளால் கருவில் இருக்கும்போதே முகரவும், சுவைக்கவும் இயலும் என்பதை  பரிந்துரைத்துள்ளன. ஆனால் அவை குழந்தை பிறந்த பின்னர் கண்டெடுக்கப்பட்ட விளைவுகளை அடிப்படையாகக் கொண்டவை. 

"எங்களின் ஆய்வு தான் கருவில் இருக்கும்போதே குழந்தைகளின் எதிர்வினைகளை கண்டறிந்தது பார்த்துள்ளது" என்று முன்னணி ஆராய்ச்சியாளர் பேசா உஸ்துன் கூறினார். இதன் மூலம் குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களுக்கு பிடித்த, மற்றும் ஆரோக்கியமான உணவை ஊட்டி வளர்ப்பதில் இது உதவலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?