பூனை கடித்ததால் 15 அறுவை சிகிச்சைகள்; விரலை வெட்டி எடுத்தும் உரிமையாளர் உயிரிழப்பு- எங்கே? canva
உலகம்

பூனை கடித்ததால் 15 அறுவை சிகிச்சைகள்; விரலை வெட்டி எடுத்தும் உரிமையாளர் உயிரிழப்பு- எங்கே?

Keerthanaa R

பூனைக் கடித்ததில் நான்கு ஆண்டுகளாக உடல் நலம் பாதித்திருந்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் ஆசையாக வளர்க்கும் செல்ல பிராணிகளில் முக்கிய இடம் பிடித்திருப்பது பூனைகள் தான். பார்ப்பதற்கு க்யூட்டாக இருந்தாலும் கெத்துடனே திரியும் விலங்கு.

நம்மை சுற்றி பூனை விரும்பிகள், பூனை வளர்ப்பவர்களை அதிகம் காணலாம். இவர்களை கொஞ்சம் கவனித்தால் அங்கங்கு பூனை கீரிய தழும்புகள் இருக்கும்.

இது தற்காலிக காயம் தான். பெரிதாக கவலைக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், தான் ஆசையாக வளர்த்த பூனையால் ஒருவர் உயிரிழந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெயிலி மெயிலின் அறிக்கைப்படி, டென்மார்க்கை சேர்ந்த ஹென்ரிக் என்பவர் பூனைகளை வளர்த்துவந்தார். 2018ல் ஒரு பூனை மற்றும் அதன் குட்டிகளை ஒரு காப்பகத்திலிருந்து இவர் அழைத்து வந்துள்ளார்

ஒரு முறை பூனைகளை இடம் மாற்றிக்கொண்டிருக்கும்போது ஒரு பூனை இவரது ஆள்காட்டி விரலை கடித்துள்ளது. முதலில் அதை ஹென்ரிக் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பின்னர் கை வீங்கியிருப்பதை கவனித்தவர் உடனடியாக மருத்துவமனையை அணுகியுள்ளார்.

அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு, ஒரு மாதத்தில் 15 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் இது வெறும் தொடக்கம் தான். ஹென்ரிக்கின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைய தொடங்கியது. அறுவை சிகிச்சை செய்து 4 மாதங்கள் ஆகியும் இவரது கை சரியாக செயல்படவில்லை.

இதனால், கடிபட்ட அந்த ஒரு விரலை மட்டும் வெட்டி எடுக்க முடிவு செய்துள்ளார் ஹென்ரிக். அறுவை சிகிச்சை மேற்கொண்டு விரலை எடுத்தப் பிறகும் அவரது கை பழைய நிலைக்கு திரும்பவில்லை.

மருத்துவர்களை அணுகியபோது, பூனை கடித்த சில மணி நேரத்திலேயே அவரது ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் உயிர் கொல்லும் பாக்டீரியா அவரது உடலில் பரவத் தொடங்கியது. நான்கு வருடங்களாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த ஹென்ரிக், கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.

பூனைக் கடிகள் அவ்வளவு ஆபத்தானதா?

ஹெல்த்லைனின் படி, பூனைகள் பலவிதமான பாக்டீரியாக்களை கொண்டிருக்கும் எனவும், அவை நம்மை கடித்துவிட்டால், இன்ஃபெக்‌ஷன் ஏற்படுத்தக்கூடிய அளவு தீவிர பாதிப்புகள் ஏற்படும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

"ஒரு பூனையின் வாயில் டன் கணக்கில் ஆபத்தான பாக்டீரியாக்கள் வளர்கின்றன. பூனைகளின் பற்கள் கூர்மையாகவும் இருக்கும். அவை உங்களைக் கடிக்கும்போது, பாக்டீரியா உங்கள் திசுக்களில் ஆழமாக செலுத்தப்படுகிறது. அந்த துளை விரைவாக மூடி, பூனையின் பாக்டீரியா உடலுக்குள் தங்கி விடுகிறது.

இதனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?