Man (Rep) pexels
உலகம்

20 ஆண்டுகளாக மாதவிடாய் பிரச்னையால் தவித்து வந்த இளைஞர்- எங்கே?

Priyadharshini R

சீனாவைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் அடிக்கடி வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் அவருக்கு சீரற்ற சிறுநீர் வெளியேற்றமும், சிறுநீரில் ரத்தமும் வந்துள்ளது.

இதனால் தனக்கு சிறுநீர் பிரச்னை என எண்ணிய அந்த நபர், மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இளைஞரைப் பரிசோதனை செய்ததில், அவருக்குக் கர்ப்பப்பை, பெண்களுக்கான ஹார்மோன்கள் உள்ளிட்ட பெண்களுக்கான இனப்பெருக்க உள் உறுப்புகள் இருப்பது தெரிய வந்தது.

man

அதாவது பெண்களுக்கான பாலியல் குரோமோசோம்கள் அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 20 ஆண்டுகளாக மாதவிடாய் பிரச்னையால் அந்த இளைஞர் தவித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மருத்துவர்கள், இதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம் என முடிவெடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிகிச்சைக்கு பின் மருத்துவமனையிலிருந்து 10 நாட்கள் கழித்து அந்த இளைஞர் திரும்பினார்.

மற்ற ஆண்களைப் போல் அந்த இளைஞர் வாழலாம் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் லுவோ ஜிபிங் கூறியுள்ளார்.

உலக மக்கள் தொகையில் 0.05 முதல் 1.7 சதவீதத்தினர் இதுபோன்று ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளுடன் உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?