Google: கல்லூரி முதல் கூகுள் வரை - CEO சுந்தர் பிச்சையின் லவ் ஸ்டோரி தெரியுமா? twitter
உலகம்

Google: கல்லூரி முதல் கூகுள் வரை - CEO சுந்தர் பிச்சையின் லவ் ஸ்டோரி தெரியுமா?

Keerthanaa R

ஒரு முறையாவது காதலிக்காதவரை இங்கு நாம் காண முடியாது. மனிதர்களுக்கும் அப்பாற்பட்டு, விலங்குகளும் கூட காதலிக்கும் கதைகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.

காதலின் சின்னமான தாஜ் மஹாலை இன்றும் நாம் கொண்டாடுகிறோம். காதல் ஒரு யூனிவர்ஸல் லாங்குவேஜ்!

கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சையின் காதல் கதை சமீபத்தில் வெளியாகி பலரை கவர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து வளர்ந்து, பின்னாட்களில் உலகின் பெரு நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் சி இ ஓ ஆனவர் சுந்தர் பிச்சை. இவர் கடந்து வந்த பாதை நம் எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால், இவருடனே சேர்ந்து இவரது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் இவரது மனைவி அஞ்சலி பிச்சை.

இவர்கள் இருவரும் கல்லூரி காதல் புறாக்கள்!

ஐஐடி கரக்பூரில் சுந்தர் பிச்சையுடன் படித்தார் அஞ்சலி. இருவரும் கிளாஸ்மேட்ஸ்.

இவர்கள் இருவருமே உலோகவியல் பொறியியல் படித்துக்கொண்டிருந்தனர். தொடக்கத்தில் எல்லோரையும் போல நண்பர்களாகவே பழகியிருக்கின்றனர் சுந்தர் மற்றும் அஞ்சலி.

ஒருவரோடு ஒருவர் அன்னோனியமாக, தங்களது கல்லூரி படிப்பின் கடைசி ஆண்டில் அஞ்சலியிடம் காதலைச் சொன்னார் சுந்தர். அஞ்சலியும் ஏற்றார். திருட்டுத்தனமாக அஞ்சலியை அவரது ஹாஸ்டலில் சந்தித்த கதைகளை சுந்தர் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

ஆனால், சுந்தர் பிச்சை பொருளாதார ரீதியில் இன்னும் வளரவில்லை. இருவரும் தங்கள் கரியரை நோக்கி பயணிக்க முடிவெடுத்தனர்.

மேற்படிப்பிற்காக சுந்தர் அமெரிக்கா சென்றுவிட்டார். ஆறுமாதக் காலம் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை, பேசிக்கொள்ளவில்லை. ஆனால் இந்த சமயத்தில் இவர்களின் காதல் இன்னும் வலுவடைந்தது.

சிறிது காலத்துக்கு பிறகு அஞ்சலியும் அமெரிக்காவுக்கு சென்றார். இந்த நேரத்துக்கெல்லாம், சுந்தர் பிச்சை அமெரிக்காவின் ஒரு முன்னணி நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்தார்.

திருமணம் செய்ய இதுவே சரியான தருணமென முடிவெடுத்தவர், அஞ்சலியின் பெற்றோர் சம்மதத்தை பெற்றார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இதன் பிறகு அமெரிக்காவிலேயே தங்கினர் தம்பதியினர். அஞ்சலி சுந்தர் பிச்சையின் லக்கி சார்மாகவே இருந்தார் என சொல்லலாம். கூகுளில் பிச்சை பணியாற்றிய சமயத்தில், ட்விட்டர், யாஹூ உள்ளிட்ட நிறுவனங்கள் அவரை சி இ ஓ பதவிக்காக நாடினர். ஆனால், கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகக்கூடாது என்று சுந்தருக்கு எடுத்துரைத்தது அஞ்சலி தான்.

மனைவியின் பேச்சைக் கேட்டு கூகுளில் இருந்த அவர், சில ஆண்டுகளில் சி இ ஓ ஆனார்.

தற்போது வரை, அந்த பதவியில் நீடித்தும் வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?