tourist Twitter
உலகம்

சுற்றுலாப் பயணியின் காதை கடித்த பெண் பாலியல் தொழிலாளி - என்ன நடந்தது?

Priyadharshini R

மதுபோதையில் பெண் ஒருவர் சுற்றுலாப் பயணி ஒருவரின் காதைக் கடித்து விழுங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது.

தாய்லாந்திற்கு சுற்றுலா பயணிகளின் வரவு அதிகமாக இருக்கும். அப்படி சுற்றுலாவுக்கு வந்த பயணி ஒருவருக்கு காது பறிபோயுள்ளது. 55 வயது மதிக்கக்கத்தக்க சுற்றுலா பயணியின் காதை பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் கடித்து முழுங்கியிருக்கிறார்.

அந்த பெண், முதியவரிடம் பேச முற்பட்ட போது அதீதமான மதுபோதையில் இருந்துள்ளார்.

அப்போது, போதையில் என்ன செய்வதென்று அறியாத அப்பெண் முதியவரின் காதை கடித்துள்ளார். பின்னர் அதை விழுங்கி இருக்கிறார். இதனையடுத்து அந்த முதியவர் வலியால் அலறல் சத்தம் போட்டுள்ளார்.

Police

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போதையில் அட்டகாசம் செய்த பெண்ணை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் லெப்டினண்ட் கர்னல் சைஜைய் கம்சுவ்லா தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?