Isreal vs Hamas : போருக்கு காரணம் இதுதான்! என்ன நடக்கிறது அங்கு? Twitter
உலகம்

Israel vs Hamas : போருக்கு காரணம் இதுதான்! என்ன நடக்கிறது அங்கு?

Antony Ajay R

இஸ்ரேல் பாலஸ்தீன் இடையிலான கசா பகுதியில் இருந்து இன்று அதிகாலை ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

20 நிமிடத்துக்குள் இஸ்ரேல் நோக்கி சுமார் 5000 ஏவுகனைகள் மூலம் அவர்கள் தாக்குதல் நடத்தியதாக செய்தியறிக்கைகள் கூறுகின்றன.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் கசா பகுதியை ஒட்டிய இஸ்ரேல் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தியதுடன் இதற்கான எதிர்வினையை ஹமாஸ் தீவிரவதிகள் அனுபவிப்பர் என்றும் கூறியுள்ளது.

ஆயுதமேந்திய ஹமாஸ் தீவிரவாதிகள் பலர் இஸ்ரேலுக்குள் நுழைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேல் மக்களே நாம் போர் சூழலில் உள்ளோம். இது இராணுவ நடவடிக்கையோ, தாக்குதல்கள் அதிகரிப்போ அல்ல - இது போர். நாம் நிச்சயம் வெற்றிபெறுவோம். முன்னெப்போதும் இல்லாத அளவு எதிர்வினையை தீவிரவாதிகள் சந்திப்பர்" என வீடியோவில் கூறியுள்ளார்.

ஹமாஸ் தீவிரவாதிகள் ஆபரேஷன் அல் அக்சா என்ற பெயரில் தாக்குதல் நடத்தும் வீடியோ பரவிவருகிறது.

ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை எதிர்த்து ஆபரேஷன் அயர்ன் இஸ்ரேல் என்ற நடவடிக்கையை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

கசா பகுதி எப்போதுமே சர்ச்சைக்குரியதாக இருந்துவருகிறது. 365 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருக்கும் அங்கு 21 லட்சம் மக்கள் வசிக்கின்றன.

இஸ்ரேல் - பாலஸ்தீன் எல்லையில் இருந்தாலும் கசா ஹமாஸ் கட்டுப்பாட்டிலேயே இருந்துவருகிறது.

இந்த ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத இயக்கமாக கருதிவருகிறது. இந்த அமைப்பு பாலஸ்தீனுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாகவும், ஈரானிடம் இருந்து நிதியுதவி பெறுவதாகவும் இஸ்ரேல் நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருகிறது.

இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியுடன் கசாவைக் கைப்பற்ற முயல்கிறது என்பது பாலஸ்தீனின் குற்றச்சாட்டு. இஸ்ரேல் இராணுவம் இதுவரை பலமுறை கசாவில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பாலஸ்தீன் அதிகாரிகள் இந்த விவகாரத்தில், இத்தனை நாட்களாக கசாவின் மக்கள் பட்ட அவதிகளுக்கான எதிர்வினைதான் இந்த தாக்குதல் எனக் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் வசமிருக்கும் இஸ்ரேலிய மக்களையும் வீரர்களையும் பணையக்கைதிகளாக வைத்திருப்பது குறித்த கேள்விக்கு, அவர்கள் பணையக்கைதிகள் அல்ல போர் குற்றவாளிகள் என பதிலளித்துள்ளார் பாலஸ்தீன அதிகாரி.

இஸ்ரேலின் நீண்டகால தொடர் தாக்குதலால் மின் வெட்டு, வேலை வாய்ப்பின்மை மற்றும் வறுமையில் வாடிவந்தனர் கசா மக்கள்.

ஏற்கெனவே உக்ரைன் - ரஷ்யா போரினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் உலகநாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த போர் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?