உறங்காத குழந்தை; ஆத்திரத்தில் கையை கடித்த பணிப்பெண் - எங்கே? canva
உலகம்

உறங்காத குழந்தை; ஆத்திரத்தில் கையை கடித்த பணிப்பெண் - எங்கே?

கடந்த ஆண்டு மே மாதம் மாசிட்டாவின் உரிமையாளர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்துவர சென்றிருந்தார். அப்போது தனது இரட்டை குழந்தைகளை மாசிட்டாவிடம் விட்டுச்சென்றார் அப்பெண்.

Keerthanaa R

தூங்காத்தால் 1 வயது குழந்தையின் கையை கடித்துள்ளார் சிங்கப்பூரை சேர்ந்த பெண் ஒருவர்.

சிங்கப்பூரில் வீட்டு வேலைக்காக பணியமர்த்தப்பட்ட 33 வயதாகும் பெண் ஒருவர், உரிமையாளரின் குழந்தையை உடல் ரீதியில் துன்புறுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தொனேசியாவை சேர்ந்த மாசிட்டா என்ற 33 வயது பெண், 2021ஆம் ஆண்டு முதல் ஒரு வீட்டில் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் மாசிட்டாவின் உரிமையாளர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்துவர சென்றிருந்தார். அப்போது தனது இரட்டை குழந்தைகளை மாசிட்டாவிடம் விட்டுச்சென்றார் அப்பெண்.

மாசிட்டா குழந்தைகளை உறங்கவைக்க முயன்றிருக்கிறார். கிட்ட தட்ட அரைமணி நேரம் கடந்தும் ஒரு குழந்தை உறங்காததால், ஆத்திரமடைந்த மாசிட்டா குழந்தையை கடித்துள்ளார்.

இரவு உணவு முடிந்து குழந்தைகளை தூங்கவைக்க சென்ற தாய், கையில் பற்களின் அச்சை கவனித்திருக்கிறார். மாசிட்டாவிடம் இதுகுறித்து கேட்டப்போது அவர் முதலில் மறுத்துள்ளார். அதன் பிறகு அவர் தான் கடித்ததாக ஒப்புக்கொண்டார் மாசிட்டா.

தன் செயலுக்காக மாசிட்டா மன்னிப்பு கோரியுள்ளார். குழந்தையின் பெற்றோர் மாசிட்டா மீது காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். கைது செய்து விசாரணை மேற்கொண்ட பின்னர் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதால் சிறை தண்டனை ஆறு மாதங்களுக்கு குறைக்கப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?