Patan: இந்த நகரத்தை ஏன் நேபாளத்தின் பொக்கிஷம் என்று அழைக்கின்றனர்? Twitter
உலகம்

Patan: இந்த நகரத்தை ஏன் நேபாளத்தின் பொக்கிஷம் என்று அழைக்கின்றனர்?

இந்து மற்றும் புத்த மதம் இரண்டின் மையமான பதான் தர்பார் சதுக்கத்தில் மொத்தம் 136 முற்றங்கள் மற்றும் 55 பெரிய கோவில்கள் உள்ளன. லலித்பூரின் மல்ல மன்னர்கள், பிரதானர்கள் மற்றும் தாகுரி வம்சத்தினர் அதன் கட்டிடக்கலை அற்புதங்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Keerthanaa R

நேபாளம் என்றதும் நம் நினைவுக்கு வருவது காத்மண்டு, எவரஸ்ட் சிகரம், அழகிய நுண் வேலைபாடுகளுடன் இருக்கும் பாரம்பரிய கோவில்கள் தான்.

ஆனால் நேபாளத்தின் நாம் மிஸ் செய்துவிடக் கூடாத மற்றொரு இடமும் இருக்கிறது. அதுதான் பதான் நகரம். இதனை நேபாளத்தின் பொக்கிஷம் என்று கூறுகின்றனர். அப்படி என்ன இருக்கிறது இந்த நகரத்தில்?

பதான்

இதனை லலித்பூர் என்றும் கூறுகின்றனர். காத்மண்டு, பக்தபூர் ஆகிய நகரங்களுடன், நேபாளத்தின் மூன்று ராயல் நகரங்களில் பதானும் ஒன்று.

காத்மண்டு பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது பதான்.

இந்த நகரம், கி மு மூன்றாம் நூற்றாண்டில் கிராத வம்சத்தினர் நிறுவினர் என்று அறியப்படுகிறது. 6ஆம் நூற்றாண்டில் லிச்சாவி வம்சத்தினரின் ஆட்சியில் இருந்த நகரம் பின்னர் மல்ல வம்சத்தினர் கைகளுக்கு வந்தது.

14 ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை மல்ல வம்சத்தினர் இங்கு ஆட்சி புரிந்தனர். இந்த சமயத்தில் தான் பதான் நகரம் அதன் வளர்ச்சியை கண்டுள்ளது

கட்டிடக்கலை

உலகின் பிரபலமான கட்டிடக்கலையின் அற்புதங்கள் இங்கு அமைந்துள்ளன. பதான் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தர்பார் சதுக்கம் யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களுள் ஒன்று.

இங்கு மரத்தினால் ஆன அரண்மனைகள், பகோடா பாணியில் கட்டப்பட்ட கோவில்கள் மற்றும் பழங்காலத்து முற்றங்கள் இருக்கின்றன.

இந்த தர்பார் சதுக்கம் 2015ல் ஏற்பட்ட நிலனடுக்கத்தின் போது கொஞ்சம் அழிவைக் கண்டது

பதான் நகரின் மற்றொரு அழகிய கலைப்படைப்பு கிருஷ்ணா மந்திர் (கிருஷ்ணர் கோவில்). பொன்னிற சிகரங்கள் மற்றும் கல் வேலைப்பாடுகளுடன் இது நகரத்தின் மிக முக்கியமான கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாகும்.

அடுத்ததாக பதான் அருங்காட்சியகம். இங்கு பழங்காலத்து கலைப்பொருட்கள், சிற்பங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை தவிர பொற்கோவில், ருத்ர வர்ண மாகாவிகார், பீமசேன கோவில் இங்கு நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள்.

இந்து மற்றும் புத்த மதம் இரண்டின் மையமான பதான் தர்பார் சதுக்கத்தில் மொத்தம் 136 முற்றங்கள் மற்றும் 55 பெரிய கோவில்கள் உள்ளன. லலித்பூரின் மல்ல மன்னர்கள், பிரதானர்கள் மற்றும் தாகுரி வம்சத்தினர் அதன் கட்டிடக்கலை அற்புதங்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

எப்போது செல்லலாம்?

ஆண்டின் எல்லா பருவத்திலும் பதான் நகரை சென்று பார்க்கலாம். உலகளவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தலங்களில் இந்த நகரம் முக்கியத்துவம் வகிக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் நடந்து சென்று சுற்றிப்பார்க்க மிக அழகாக இருக்கும் பதான் நகரம். இதற்கு இந்த பாரம்பரிய தலங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததும் ஒரு காரணம்

காத்மண்டுவிலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவோ, பஸ் அல்லது வாடகை கார் மூலமாகவோ பதான் நகரை சென்றடையலாம். ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்தில் இவ்விடத்திற்கு சென்று விடலாம்

எங்கு தங்கலாம்?

தங்குவதற்கு பதான் நகரிலேயே ஹோம் ஸ்டேக்கள் கிடைக்கின்றன. இது நகரத்தின் வாகன சச்சரவுகளில் இருந்து நம்மை விடுபட செய்கிறது. இல்லையென்றால் காத்மண்டுவில் தங்கிக்கொள்ளலாம்.

தர்பார் சதுக்கத்தின் உள்ளும் வெளியிலும் நிறைய கஃபேக்கள், பேக்கரிகள் உணவகங்கள் இருக்கின்றன. இங்கு பாரம்பரிய நேபாள உணவுகள், இந்திய மற்றும் சர்வதேச உணவுகளும் கிடைக்கின்றன.

கஃபே து டெம்பிள் மிக பிரபலமான தேநீர் விடுதி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?