தமிழகம் முதல் ஜப்பான் வரை - பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட இடங்கள்  Twitter
உலகம்

தமிழகம் முதல் ஜப்பான் வரை - பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட இடங்கள்!

Keerthanaa R

என்னதான் உலகம் மாறிவிட்டது என்றாலும், சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று சொன்னாலும், அங்கு அங்கு இதற்கு எதிர்மறையாக சில சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

குறிப்பாக பெண்கள் சுதந்திரம் என்ற விஷயத்தில். உலகில் இன்றும் சில இடங்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை இருக்கிறது. எந்தெந்த இடங்கள்? இந்த பதிவில் காணலாம்

கார்திகேயா கோவில், இந்தியா

ஹரியானா மாநிலம், பெஹோவா நகரம், குருக்‌ஷேத்திரா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது இந்த கோவில். இந்தியாவின் பிரபலமான முருகர் கோவில்களில் ஒன்று இது. 5 ஆம் நூற்றாண்டு கோவிலான இங்கு பெண்கள் வந்து வழிபட அனுமதியில்லை.

முருகக் கடவுள் இங்கு பிரம்மச்சாரி கோலத்தில் காட்சியளிக்கிரார். இதனால் பெண்கள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மீறிச் சென்றால், அடுத்த ஏழு ஜென்மங்களுக்கும் பெண்கள் விதவையாக தான் வாழ்வார்கள் என்ற சாபம் அவர்கள் மீது விழுந்துவிடும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

பர்னிங் ட்ரீ கிளப், அமெரிக்கா

1923ல் தொடங்கப்பட்ட இந்த கிளப் அமெரிக்காவின் பிரபலமான கோல்ஃப் கிளப்களில் ஒன்று.

இங்கு உயர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு அதிகாரிகள் கூட வந்து செல்கின்றனர். உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

ஆனால் இங்கு பெண்களுக்கு அனுமதியில்லை. இதற்கான காரணம் சொல்லப்படவில்லை என்றாலும் பெண்கள் இங்கு வரவோ, இந்த கிளப்பில் உறுப்பினராகவோ அனுமதிக்கப்படுவதில்லை.

மௌண்ட் எதோஸ், கிரீஸ்

ஒரு முறை கடவுளின் தாயான மரியா டஇந்த சிகரத்துக்கு வந்துள்ளார். அந்த இடம் அவருக்கு பிடித்துபோனதால் மகனிடம் அந்த இடத்தை அவருக்கே கொடுத்துவிடுமாறு கேட்டாராம்.

இதனால் அங்கு மரியாவை தவிர வேறு எந்த பெண்ணுக்கும் அனுமதியில்லை என்ற ஒரு கதை உள்ளது.

இங்கு ஒரு நாளைக்கு 100 ஆர்த்தடாக்ஸ் (தீவிரமாக சமயத்தை பின்பற்றுபவர்கள்) மற்றும் 10 ஆர்த்தடாக்ஸ் அல்லாத ஆண்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

கிட்ட தட்ட 1000 ஆண்டுகளாக இங்கு பெண்களுக்கு அனுமதியில்லை.

சபரிமலை, இந்தியா

சபரிமலையில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதியில்லை. இந்தியாவில் ஆண்டுதோறும் அதிக பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கோரி பெரும் போராட்டங்கள் நடந்ததை நாம் அறிவோம்.

இங்கு அய்யப்பன் பிரதான கடவுள். இவர் பிரம்மச்சாரியாக தோற்றமளிப்பதால் இந்த கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடையுள்ளது.

ஓகினோஷிமா தீவு, ஜப்பான்

மாதவிடாய் ரத்தம் அசுத்தமானது என்று நம்புவதால் இங்கு பெண்களுக்கு அனுமதியில்லை.

அதேபோல மதுரையில் அமைந்திருக்கும் ஸ்ரீமந்தனகுமாரன் கோவிலுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதியில்லை. இங்கு நூற்றுக்கணக்கில் கிடாய் வெட்டப்பட்டு விருந்து பரிமாறப்படும். ஆனால் இந்த சமபந்தி விருந்தில் பெண்கள் பங்கேற்க கூடாது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?